Monday, March 24, 2014

நீங்காத புகழுடையவர்!


ஓராண்டுக்கு முன்னால் ஸ்தூலதேகத்தோடு வாழ்ந்து, இன்று அருள் உடம்பால் அனைவருக்கும் அருள் வழங்கும் நாகராஜ பாபா அவர்களை நன்றியோடு நினைவு கூர்கிறோம்.
     சாயி தரிசனம் வளர்ச்சிக்கு அவர் காட்டிய அக்கறை, சாயி பக்தர்கள் மீது அவர் பொழிந்த அருள் மழை, வேறு எவரும் செய்திராத செய்கையாகும்.
     ஐயாவின் ஓராண்டு சமாதி நாள் பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தில் எளிமையாக அனுஷ்டிக்கப்பட்டது. அவர் உருவாக்கியுள்ள ஆலயங்கள் மிகப் பெரிய அளவில் வளர சாயியிடம் பிரார்த்தனை செய்கிறோம்.
     நாகராஜ பாபா இன்றும் வாழ்கிறார் என்பதற்கு சான்றாக அவரது புகைப்படத்திலிருந்து விபூதிப் பிரசாதம் கொட்டுவதை சிட்லப்பாக்கம் சாயி பாபா ஆலயம் செல்வோர் இன்றும் கவனிக்கலாம்.

     ஐயாவின் குடும்பத்தாருக்கு சாயி தரிசனம் தனது வணக்கத்தைக் காணிக்கையாக்குகிறது.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...