Sunday, March 23, 2014

சத்சரித்திரம் சொல்வது!



            உணவுக்காகவும், உடைக்காகவும் கடின முயற்சி எடுக்காதீர்கள். உங்களுக்கு ஏதாவது வேண்டுமானால் கடவுளிடம் இரந்து கேளுங்கள். இவ்வுலக கவுரவத்தை விட்டுவிடுங்கள். கடவுளின் அருளையும் ஆசியையும் பெற முயலுங்கள். உலக கவுரவங்களால் வழி தவறி விடாதீர்கள். இறைவனின் ரூபம் மனதில் ஸ்திரமாகப் பதிக்கப்பட வேண்டும்.
     புலன் அனைத்தும், மனமும் எப்போதும் இறைவனது வழிபாட்டிற்கே உரித்தாக்கப் படட்டும். வேறு எவ்விதப் பொருட்களிலும் எவ்விதக் கவர்ச்சியும் வேண்டாம்.
     உடல், செல்வம், வீடு முதலிய வேறு எதைப் பற்றியும் மனது அலைந்து திரியாமல் எப்போதும் என்னை நினைத்துக் கொண்டிருப்பதிலேயே மனத்தை ஸ்திரப்படுத்துங்கள்.
     அப்போது அது அமைதியாகவும், அடக்கமாகவும், கவலையற்றும் இருக்கும்.

ஸத்சரிதம்! அத்தியாயம் - 6

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...