Saturday, June 29, 2013

சின்னதோ பெரியதோ உன் கோரிக்கைகளை பாபா கேட்பார்!




சாயி பாபா செய்த அற்புதம்

என் பெயர் பத்மாவதி. என் கணவர் பெயர் துரைராஜ். சென்னை நுங்கம்பாக்கத்தில் வாழ்ந்து வந்தோம். ஐந்து பிள்ளைகள். கஷ்டத்தோடுதான் வாழ்க்கையை ஆரம்பித்தேன். என் கணவர் குடித்தே வாழ்க்கையை சீரழித்துக் கொண்டதோடு, பாதி நாள் வாழ்க்கையோடு வாழ்வை முடித்துக்கொண்டார்.
அம்மனைத்தான் வணங்குவேன். பாபா பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. போன ஜென்மத்துப்புண்ணியம் இருந்ததால் அவர் எங்களை காலில் நூலைக் கட்டி இழுப்பதைப் போல இழுத்துக் கொண்டார். எப்பொழுதும் அவரது நாமத்தையே இடைவிடாமல் ஜெபித்துக் கொண்டிருக்கும் நிலையைத் தந்தார் அவர்.
என் மகள் மற்றும் குடும்பத்தார் சாயி தரிசனம் பத்திரிகையை வாங்கிப்படிப்பார்கள். என்னை ஒரு நாள் ஆலந்தூரில் உள்ள எனது தங்கை சாவித்திரி என்னை சீரடிக்குப் போகலாம் என அழைத்தாள். நானும் அவளும் இரண்டு பேரும் மட்டும் சீரடிக்குப் போனோம். பாபாவின் இடங்களை தரிசித்து பரவசமடைந்தோம். அதன் பிறகு சென்னை வந்த நான் தீவிர சாயி பக்தையாகி. எல்லாவற்றுக்கும் அவரையே நம்ப ஆரம்பித்தேன்.
என் கணவருக்கும் அவரது சகோதரிகளுக்கும் உரிமையான இடம் பாகம் பிரிக்கப்படாமல் இருந்தது. அவர் போய் விட்ட நிலையில் அது பெரிய பிரச்சினையாக ரூபம் எடுத்தது. பாபாவுக்கு ஒன்பது வார விரதமிருந்து வேண்டிக் கொண்டேன். ஒரு பிரச்சினையும் இல்லாமல் பாகம் பிரிக்கப்பட்டது.
என் மகனுக்குத் தலைவலி வருவதைத் தவிர்க்க எப்போதும் கண்ணாடி அணிந்திருப்பான். ஒரு முறை, மீஞ்சூர் போக ரயிலுக்கு நின்றிருந்தோம்.  இரவு நேரம் வேறு. கூட்ட நெரிசலில் கண்ணாடி தவறி கீழே விழுந்துவிட்டது. கூட்டம் கண்ணாடியை மிதித்திருககும் என நினைத்தோம். பாபாவிடம் பிரார்த்தனை செய்தேன். வண்டி போன பிறகு செல்போன் வெளிச்சத்தில் தேடிப் பார்த்தால், சிறு கீறல் கூட இல்லாமல் இருந்தது.
என் கடைசி மருமகளுக்கு இரண்டாவது பிரசவம். சர்க்கரை வியாதி இருந்ததால் அனைவரும் பயந்து கொண்டிருந்தோம். பிரசவ நாளன்று பாபாவின் உதியை அவள் வயிற்றில் தடவி விட்டேன். சிறிது நேரத்தில் நல்லபடியாக ஆண் குழந்தை பிறந்தது. பிறகு சர்க்கரை வியாதியும் குறைந்த்து.

                                                பத்மாவதி, நுங்கம்பாக்கம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...