Thursday, June 6, 2013

பாபா காட்டிய மூன்று உலகங்கள்




சத்சரித்திரம் பதிவு செய்யாத பல அற்புத லீலைகள் உள்ளன. அவற்றைப் பற்றியும் பார்க்கலாம்.
  பாபாவின் முதன்மை பக்தர் என்று சொல்லிக்கொள்ளும் பெருமை சாமாவுக்கு உண்டு. கிருஷ்ணனுக்கு அர்ஜுனன் என்றால், பாபாவுக்கு சாமா. குழந்தைத்தனமாகவும், உரிமையோடும் பாபாவிடம் உறவு கொண்டாடுவார் சாமா.
சாமாவுக்கு சத்தியலோகம், வைகுந்தம், கைலாயம் போன்றவை இருக்கிறதா என்ற சந்தேகம் வந்துவிட்டது. இதைப் பற்றி பாபாவிடமே கேட்டார். இருக்கிறது என்று சொன்னதும், ஹரே தேவா! அதை ஏன் இன்னும் என்னிடம் காட்டவில்லை? என்றார் சாமா.
அவையெல்லாம் மேலான ஐஸ்வர்யம் உள்ள இடங்கள். அவற்றை நம்மால் காணக்கூட முடியாது என்றார் பாபா. அதை எப்படியேனும் நான் பார்த்தாக வேண்டும் என சாமா அடம்பிடித்தார். உடனே சாமாவை கண்களை மூடச் சொன்னார் பாபா.  சாமா கண்களை மூடியதும் அவருக்கு ஞான திருஷ்டி உண்டாயிற்று.
முதலில் வைரம் போன்ற உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட தங்க சிம்மாசனத்தையும் அதன் மேல் வீற்றிருக்கும் ஒருவரையும் பார்த்தார் சாமா. அவரது இரு பக்கங்களிலும் வரிசையாக சிம்மாசனங்களும், அவற்றில் தேவர்கள் மற்றும் ரிஷிகள் பலரும் அமர்ந்திருந்தார்கள்.
சாமா உன் கண்களைத் திற என்றார் பாபா. கண்களைத் திறந்தபோது, மீண்டும் மூடிக்கொள் என்றார்.
இப்போது சாமா வைகுந்தத்தையும் அதில் நாராயணன் லட்சுமி தேவியையும் தரிசித்தார். இங்கும் பல அதிசயங்களைக் கண்டார்.
அடுத்து அவரை கண்களைத் திறந்து மூடுமாறு பாபா சொன்னபோது, சாமா கண்களைத் திறந்து மூடினார்.  இந்த முறை அவர் கைலாயத்தை தரிசித்தார். இவற்றையெல்லாம் தரிசித்த போது சாமாவுக்கு பயம் வந்துவிட்டது. திகிலோடு கண் திறந்தார். அவரைத் தட்டிக் கொடுத்த பாபா, சாமா,  இவையெல்லாம் நமக்கு வேண்டாம். நமது வழி முறைகள் வழக்கத்திற்கு மாறானதுஎன்றார்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...