Wednesday, June 19, 2013

சாயி பாதுகை

சாயி பாதுகை


அன்பார்ந்த சாயி பக்தர்களே, நீங்கள் இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான சாயி மந்திர் (கோவில்)களுக்குச் செல்லும்பொழுது அங்கு சாயி பாதுகைகள் வைக்கப்பட்டிருப்பதையும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதன் மேல் தலை வைத்து வணங்குவதையும் காணலாம். இந்த வழக்கத்தைப் பற்றி இந்த கட்டுரையில் சிந்திப்போம்.

பாதுகை பூஜை வரலாறு 


வால்மீகி ராமாயணத்தில் ராமரை பதினான்கு வருடங்கள் வனவாசம் அனுப்பியபின் பரதர் ரகுவம்ச ராஜ்யத்தின் மன்னராக பதவி ஏற்கும் சூழ்நிலையில், முனிவர் வசிஷ்டரின் அறிவுரைப்படி பரதர், ராமரது பாதுகைகளை (மரத்தில் செய்யப்பட்ட காலணிகள்) தன் தலைமேல் ஏந்தி வந்து அரசவை அரியாசனத்தில் வைத்து வணங்கி வந்தார். ராமர் காட்டில் இருக்கும் நிலையில், ராமரது ஆளுகை போல, ஓர் நிகரான உருவகமாக பாவித்து அந்த பாதுகைகள் பரதரால் நிறுவப்பட்டு மக்களின் மரியாதைக்கும், பேரன்பிற்கும், மதிப்பிற்கும் உரியதாயின (கூடுதல் தகவல்களை ராமாயண நூலில் காண்க). அன்றைய நாளிலிருந்து பாதுகை பூஜை அல்லது மரியாதை வழக்கம் ஏற்பட்டது.



                                                                                          To know more click here

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...