Wednesday, February 26, 2014

எங்கும் நிறைந்த பாபா

கபர்தேயின் மனைவி சீரடியில் நைவேத்யம் செய்து பாபாவுக்கு படைப்பதோடு, அவரை தன் அறைக்கு வந்து உணவு உண்ணுமாறு கேட்டுக் கொள்வார். பாபாவும் வருவதாகச் சொல்வார். ஆனால் ஒருநாள் கூட போனதில்லை.
     ஒருநாள் அவள் பாபாவுக்கு உணவு தயாரித்துக்கொண்டிருந்த போது ஒரு நாய் வந்தது. அந்த நாயைப் பார்க்கவே அவளுக்கு அருவருப்பாக இருந்தது. அசுத்தமானது, நோய்க் கிருமிகளைப் பரப்பக்கூடியது என நினைத்து அந்த நாயின் மீது எரிந்துகொண்டிருந்த விறகுக் கட்டையைத் தூக்கிப் போட்டாள். நாய் அங்கிருந்து ஓடிவிட்டது.
     கபர்தேயின் மனைவி உணவு தயாரித்துக்கொண்டு மசூதிக்குச் சென்று படைத்தாள். பிறகு வழக்கம் போல, பாபாவை தன்னிடத்திற்கு வந்து உணவு உண்ணுமாறு அழைத்தாள்.
     ஐயோ, அம்மா! இன்று நான் வந்திருந்தேன். நீ என்னை கொள்ளிக் கட்டையால் அல்லவா அடித்துத்துரத்தினாய்? என்றார் பாபா.

                அந்தம்மாள் பாபாவின் எங்கும் நிறை தன்மையை உணர்ந்ததோடு, தன் செயலுக்கு வெட்கப்பட்டு வருந்தினாள்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...