Wednesday, February 12, 2014

குரு மீது நம்பிக்கை

           நிறைய பேர் ஒரு அடியவரை தரிசிக்கச் சென்று, அவர் இல்லை என்று கண்டால், அவருக்குப் போன் செய்து ‘‘ஐயா, உங்களுக்காக சிறிது காணிக்கை எடுத்து வந்திருக்கிறேன், பெற்றுக்கொள்கிறீர்களா?’’ என்று கேட்பார்கள்.
     இதேபோல பாபாவிடம் ஒரு பெண்மணி நிறைய பணம் எடுத்துக்கொண்டு வந்து, தனக்கு குருவாக இருக்குமாறு வேண்டியபடி நான்கு நாட்கள் நின்றிருந்தாள். பாபா பக்தர்களிடமிருந்து தட்சணை என்ற பெயரில் பணம் வாங்குகிறார் என்பதை அறிந்திருந்ததால், காரியத்தை சுலபமாக சாதிக்க நினைத்தாள்
     அவள். அவளிடம் எந்த தட்சணையையும் கேட்டாரில்லை. நான்காவது நாள், அவள் பொறுமையிழந்தவளாக, பாபா நான் இங்கே ஒரு குருவை நாடி வந்து காத்திருக்கிறேன். நீங்கள் எனக்கு குருவாக இருந்து உபதேசம் செய்து வையுங்கள் என்றாள்.
     யாரும் உனக்கு குருவாக முடியாது. நீ யாரை குருவாக மதித்து அவர் மீது நம்பிக்கை வைக்கிறாயோ அவர்தான் உன் குருவாக இருக்கமுடியும். இந்த பானையை எடுத்துக் கொண்டு அதை உன் குருவாக நினைத்துக் கொள். உன்னுடைய இலட்சியம் நிறைவேறுகிறதா இல்லையா என்பதைப் பார் என்றார்.

     குருவை பணம் கொடுத்து வாங்கமுடியாது. அப்படி நினைப்பது பாவம். எனவே, காசு கொடுத்து குருவை அழைக்காதீர்கள்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...