Saturday, May 12, 2018

நானும் நீயும் வேறல்ல:



கர்மங்களைக் கடைப்பிடிக்கும் விஷயத்தில் தர்க்கம் செய்யவேண்டாம். ஜீவர்களுக்கு நன்மை உண்டாக்கவே கர்மங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. யாருக்கு எது நலமோ அது முன்பாகவே தீர்மாணிக்கப்பட்டுள்ளது. நல்ல கர்மங்களை அனுசரிப்பதன் மூலமே கர்மா நிச்சயமாகக் கரைந்து போகிறது.
வேதங்களாகட்டும், சாத்திரங்களாகட்டும், அதிகமாக எதைப்பற்றி விவரமாகக் கூறியுள்ளதோ, அவை முற்றிலும் நன்மையளிப்பவையே என்பதை மறக்க வேண்டாம். அப்படிப்பட்ட கர்மங்களை அனுசரிப்பதில் வெளிமுகமாக நீ கர்த்தா, கர்மா, கிரியா போல தென்பட்டாலும் அந்த திரிகரணங்கள் "நானே" என்பதை மறக்காதே.
கர்த்தா, போக்தா, சம்ஹர்த்தா என்ற மூன்று காரியங்களும் நானாகவே இருந்தேன் என்ற விஷயம் உன் மனதில் இருக்கும்போது பலனுக்காக சகஜமாகவே நீ ஆசைப்படமாட்டாய். அந்த பலனும் கூட நானே. ஆகையால் எப்போதும் என்னையே நினைத்து தான் செய்யும் காரியங்களை எனக்கு அர்ப்பணம் செய்து, யார் காரியங்களை நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கு என் உதவி, கிருபை, ரட்சனை எப்போதும் இருக்கும். இக் காரணத்தால் என்னை ஒவ்வொரு கணமும் ஸ்மரித்து வந்தால், அவர்களுடைய கர்மங்கள் என் பாதங்களில் சரணடைகின்றன. நான் சாயி சொரூபமே என்ற பாவம் வளர்த்துக்கொள். நானும்,நீயும் வேறல்ல நீ என்னுடைய பிரதிபிம்பமே. நீ காண்பதெல்லாம் என் சொரூபமே என்ற நம்பிக்கை இருந்தால் நான் உன்னுடையவனே

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...