Sunday, May 20, 2018

உன் அம்மாவாக அப்பாவாக என்றும் துணை நிற்பேன்...!



என் அன்பு குழந்தையே.. !
உன் வாழ்க்கையில் நீ என்ன செய்கின்றாய் என்ன யோசிக்கின்றாய் என்பதற்கு காரணம் நீ இல்லை. உனக்குள் இருக்கும் அனைத்துமே நான் அறிவேன். நான் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறேன் என்று உன்னை நீ காரணகர்த்தாவாக நினைத்து கொள்ளாதே. நீ நினைக்கின்ற நினைப்புகளுக்கும் காரணம் நானே. நீ செய்கின்ற செயல்களுக்கும் காரணம் நானே. உன் வாழ்க்கையில் நீயும் சரி உனக்கு என்ன நடக்கிறதோ இவை அனைத்தும் என் அனுமதி இல்லாமல் உன்னிடம் வராது. என் குழந்தை நீ என் உயிருக்கு உயிராய் இருக்கும் அன்பான குழந்தை. உன்னை ஓவ்வொரு நிமிடமும் என் கருவில் சுமந்து என் நெஞ்சில் தாங்கிக் கொண்டு இருக்கிறேன். குழந்தைகள் தவறு செய்வது இயல்பு. உன் தாயாய் தகப்பனாய் நான் கண்டிப்பேன். உன்னிடம் பிழை இருந்தால் அதை மாற்றி அமைக்க வேண்டியது நான்.  அதற்காக என் குழந்தையை எனக்கு எப்படி பிடிக்காமல் போகும். உன்னை விட்டு நான் செல்வேன் என்று எப்படி நினைத்தாய். என்னை உலகமாய் நினைத்து உயிராய் நம்பும் என் குழந்தையாகிய உன்னை விட்டு ஓரு போதும்  நான் விலகுவதும் இல்லை. உன்னை விலகிப் போகும் படி நான் செய்வதும் இல்லை. உன் அம்மாவாக அப்பாவாக என்றும் துணை நிற்பேன்...!

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...