Tuesday, May 22, 2018

குரு தேவையா?



இக்கேள்விக்கு பாபாவின்_பதில்
ஹேமத்பந்த், பாபா இவ்விஷயத்தைப்பற்றி என்ன சொன்னார் என்று எவ்விதக் குறிப்பும் விட்டு வைக்கவில்லை.  ஆனால் காகா சாஹேப் தீஷித் இவ்விஷயத்தைத் தனது குறிப்புகளில் பதிப்பித்துள்ளார்.   ஹேமத்பந்த், சாயிபாபா சந்திப்பின் அடுத்த நாளில், பாபாவிடம் காகா சாஹேப் தீஷித் சென்று, 
”நான் ஷீர்டியை விட்டுப்போக வேண்டுமா ?” எனக்கேட்டார்.  
பாபா "ஆம்" என்றார்.  
பிறகு "எங்கே போவது" என கேட்டார்.  
பாபா "உயர... மேலே...!" என்று கூறினார். 
"வழி எப்படிப்பட்டது" என பாபாவிடம் வினவினார்.  
பாபா கூறினார்,  "அங்கே போவதற்குப் பல வழிகள் உள்ளன.  இங்கிருந்தும் (ஷீர்டியிலிருந்தும்) ஒரு வழி உள்ளது.  பாதை கடினமானது.  புலிகளும், ஓநாய்களும் வழியிலுள்ள காடுகளில் உள்ளன".  நான் (காகா சாஹேப் தீஷித்) கேட்டேன், "ஒரு வழிகாட்டியை நாம் அழைத்துச் சென்றால் என்ன?"  அதற்குப் பாபா கூறினார், "அப்போது கடினம் இல்லை.  புலி, ஓநாய், படுகுழிகள் முதலியவற்றிலிருந்து உன்னை விலக்கி, உன் குறிக்கோளை அடைய நேரடியாக அழைத்துச் செல்வார்.  வழிகாட்டி இல்லையென்றால் காடுகளில் நீ காணாமல் போகலாம் அல்லது படுகுழியில் விழும் அபாயம் இருக்கிறது."

இந்நிகழ்ச்சியின்போது தாபோல்கரும் அறை அருகே இருந்தார்.  இதுவே குரு அவசியமா என்னும் விவாதத்திற்கு பாபாவின் பதில் என்று எண்ணினார்.

சாயிசத்சரிதம் அத்:2

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...