Thursday, May 24, 2018

எது வந்தாலும் நீ கலங்காதே



"அன்புக் குழந்தையே!. சோதனைக் காலம் வரும்போது நீ பயப்படாதே, கலங்காதே. தந்தை தன் பிள்ளைகளை கண்டித்து நடத்துவதைப் போல இறைவனான நானும் நான் நேசிக்கிறவர்களைக் கடிந்து  நடத்துகிறேன். இதைப் புரிந்து கொண்டு நீ நடக்கும்போது நான் உன்னை பொறுப்பு எடுத்துக்கொள்வேன். எதற்கும் நீ பயப்படாதிருப்பாய். எப்போதும், எல்லாவற்றுக்காகவும் சந்தோஷமாக இரு! நான் உன்னோடு இருப்பதால் நீ அனைத்தையும் ஜெயிக்கப்போகிறாய். நான் உனக்கு ஜெயம் தருவேன் கஷ்டம் வந்தால் துவண்டு போகாதே அது உன் பூர்வ ஜென்ம கர்மா இன்பத்தை எவ்வாறு சந்தோசமாக ஏற்கின்றாயோ அதே போல் கஷ்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்று என் மீது போட்டு விடு நான் பார்த்து கொள்கிறேன் கவலைப்படாதே  நான் உன்னோடு இருக்கிறேன். பயப்பாடதிரு. பலம் கொண்டு திடமான மனதோடு இரு .  உன்னை ஒரு போதும் நான் கை விடவே மாட்டேன் . உன்னை விட்டு விலகுவதும் இல்லை கை விடுவதும் இல்லை. நீ கலங்காதே எது வந்தாலும் நீ கலங்காதே, சோதனையைத் தருகிற நான் அதை தாங்கும் சக்தியையும் தருவேன் தப்பிக்கிற வழிகள் பலவற்றையும் உருவாக்கி அளிப்பேன். உனக்கு பின் இருப்பது நான். உன்னை கைவிட மாட்டேன்.."!

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...