என் அன்பு குழந்தையே உன் வாழ்க்கையில் ஏன் இவ்வளவு
நம்பிக்கை இல்லாப் பின்னடைவு. நீ என் மீது நம்பிக்கை
வைத்துள்ளாய். ஆனால் உன் வாழ்வில்
முன்னேறுவோம் என்ற நம்பிக்கை இல்லாமல் சோர்ந்து போய் இருக்கிறாய். இதனால் மனதிலும் உடம்பிலும் சத்து இன்றியும், நம்பிக்கை இல்லாமல் இருக்கிறாய். ஏதோ வாழ்க்கை நடக்கின்றது என்றே
ஓடுகிறாய்.
உனக்கான தீர்வு உன்னிடம் உள்ளது. என்னால் என் வாழ்வில் புத்துணர்வுடன் வாழ முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்ச்சித்து, நான் கண்டிப்பாக ஜெயிப்பேன் என்று நீ
நம்பினால், உனக்கு எல்லாம் ஜெயமே.
உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை உன்னை விலகிப் போகும்படி நான் செய்வதும்
இல்லை உன் அம்மாவாக அப்பாவாக என்றும் துணை நிற்பேன் !!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!
No comments:
Post a Comment