Thursday, May 31, 2018

இத்தனை சோதனைகள் ஏன் தெரியுமா?


என் அன்பு குழந்தையே உன் வாழ்க்கையானது இனிமேல் தான் தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற யுகத்தில் இருக்காதே அது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது அது விதி உன் வாழ்க்கையில் சில நேரம் ஆறாக அருவியாக கடலாக சீற்றங்களும் இடம்பெறும் அது ஏன் சாய்அப்பா என் வாழ்க்கையில் மட்டும் தான் நடக்குமா என்று தானே கேட்கிறாய்
என் பி்ள்ளையிடம் நிறைய நற்பண்புகள் இருக்கின்றது அது நிலைத்து என் பிள்ளை தனிச்சையாக மனஉறுதியுடன் நேர்மையுடன் இருக்கவே இத்தனை சோதனைகள் உன் பாதை என் நோக்கி என்று கிளம்ப ஆரம்பித்ததோ அன்றே நீ செம்மையான வாழ்க்கைகுள் நுழைந்து விட்டாய் இப்போது பயிற்ச்சியை தான் மேற்கொள்கிறாய் நிச்சயம் நீ முன்னேறி  வாழ்க்கையில் வெற்றி அடைவாய்  அதற்கான மாறுதல்களை உன் வாழ்க்கையில் இடம்பெறச் செய்துள்ளேன் அது உனக்கு நன்றாக புரியும் ஒன்று என் பிள்ளை அப்படி யோசிக்க மாட்டார்கள் இருந்தாலும் உன் சாய்அப்பா நான் அதனால் இ்ந்த அறிவுரை காசு என்பது வெறும் காகிதம் அது உன் உள்ளத்துக்கு நிறைவு தராது பணம் என்ற சொல் வெறும் காகித சொல் என்ற இரு அதற்கு முக்கியத்துவத்தை நீ கொடுக்காதே உன் வாழ்க்கை நானே என்னில் சங்கமித்து உள்ளது நீ நிச்சயம் நன்றாக இருப்பாய் என் அருளும் ஆசியும் எப்போதும் உண்டு உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை உன்னை விலகி போகும்படி நான் செய்வதும் இல்லை என் உயிர் நீ தான் என் செல்லமே உன் அம்மாவாக அப்பாவாக என்றும் உன்னிடத்தில் இருந்து துணையாக  என் பிள்ளையான உன்னை அரவணைப்பேன்!!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...