அன்பு குழந்தையே.. !
ஏன் இப்படி
இருக்கிறாய்? வருத்தப்படாதே. பல சோதனைகளை கடந்த போதிலும், ஒரு நிரந்தர தீர்வு இல்லாமல் தினமும் அவதிபட்டு, நீ செல்லும் இடமெல்லாம்
மன உளைச்சலுக்கு ஆளாகி பெரும் வேதனையில் உள்ளாய். குழந்தாய்! இவை அனைத்தில் இருந்தும் நீ
விடுபடப்போகிறாய் கவலைப் படாதே! துவண்டு போகாதே! இத்தனை காலமும் நீ பட்ட கஷ்டங்கள் அனைத்தும் உன்னை விட்டு ஓடி
ஒளியும். அனைவரும் வியக்கும் வண்ணம்
வாழ்க்கையில் உன்னை உயர்த்தப் போகிறேன்.
இனி உன் நாவில் இருந்து வரும் வார்த்தைகளால் உன்னைத் தேடி மற்றவர்கள் வரும் நேரம் வந்துவிட்டது. எவன் ஒருவன் வாழ்க்கையில் நிறைய தோல்விகளை மட்டுமே சந்திக்கின்றானோ, அவன் கோழை அல்ல. அவன் வெற்றி என்னும் இலக்கை விரைவில் அடையப் போகிறான் என்று அர்த்தம். குழந்தாய்! கவலையை விடுத்து நித்தமும் என் நாமத்தை உச்சரி. எவன் ஒருவன் உதவி நாடி வருகிறானோ, அவனைத் தேடிச் சென்று உதவி செய். பசி என்று எவன் வினவுகிறானோ, அவனது பசியை உடனே போக்க முயற்சி செய். அப்பா
நான் இருக்கிறேன் சிறிதளவும் கவலை வேண்டாம்..."!
No comments:
Post a Comment