Sunday, May 20, 2018

நீ செய்ய வேண்டியவை


  • உன்னுடைய வாழ்க்கை எனும் ஓடத்தை என்னிடம் தந்துவிட்டால், இந்த வாழ்வெனும் கடலை கடக்க நான் உதவி செய்வேன்
  • நீ துனியில் இருந்து வரும் புகையை சுவாசித்தால் உன் உடலில் உள்ள அனைத்து நோயும் நீங்கிவிடும்
  • துவாரகாமாயி மற்றும் என் சமாதியின் பெருமைகளை நீ உணர்ந்து கொண்டால் என்னை நீ பார்க்க முடியும்
  • உன்னுடைய வாழ்க்கையையே என்னிடம் தந்து விட்டால், உன்னுடைய வாழ்வின் ஒரு அங்கமாக நான் இருப்பேன்
  • என் மீது நம்பிக்கை வைத்து என் மீது உன் மனதை செலுத்தி வந்தால் அனைவரும் உன் மீது நம்பிக்கை வைப்பார்கள்
  • வியாழன் அன்று தரப்படும் என்னுடைய பிரசாதத்தை நீ பணிவுடன் ஏற்றுக்கொண்டால் அன்றைய தினத்தின் அனைத்து நன்மைகளும் உனக்கு கிடைக்கும்
  • என்னையே நீ நினைத்துக் கொண்டு இருந்தால் அனைவரும் உன்னையே நினைத்துக் கொள்வார்கள்
  • என்னையே நீ வேண்டிக் கொண்டால் உன்னுடைய அனைத்து வேண்டுகோளின் போதும் நான் வந்து உனக்கு வழி காட்டுவேன்
  • என்னை தூய கண்களுடன் நீ தரிசித்தால் அனைத்து மதத்தினரையும் அன்புடன் பார்க்க வைப்பேன்
  • என்னை ஊதுபத்தி புகையில் இருந்து வெளிவருவதாக கருதிப் பார்த்தாயானால், எந்த இடத்தில் வரும் புகையிலும் என்னை நினைக்க வைப்பேன்
  • சாயி ஆலயத்தில் ஏதாவது வேலையில் நான் உதவிக்கொண்டு இருப்பவனைப் போல இருப்பதாக உணர்ந்தால், உன்னுடைய அனைத்து காரியத்திலும் நான் உதவுவேன்
  • என்முன் நீ கைகூப்பி நின்றால் உன் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து தடங்கல்களையும் தடுத்து நிறுத்துவேன்


No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...