Friday, May 18, 2018

என் வார்த்தைகளின் மீது நம்பிக்கை வை



உன் கவலைதான் என்ன? என்னிடம் கூறிவிடு நானே உனது சத்குரு; என்னையே நினை; என் நாமத்தையே ஸமரணம் செய்து என்னை வணங்கி  என் பாதங்களில் சரணடை அது போதும் உனக்கு.
       நீ எதற்கும் பயப்படாதே. நீ ஏன் கவலைப்படுகிறாய்?    என்னை    நீ தஞ்சமடைந்து விட்டாயல்லவா!  நான் பார்த்து கொள்கிறேன். இனி எதற்கும் நீ பயப்பட தேவை இல்லை. உனது மனம், புத்தி, அகங்காரம்  எனும் மூன்றையும் என்னிடம் சமர்ப்பித்து விடு. இவ்வுலக வாழ்க்கையில்  உன் கையில்  ஏதுமில்லை.  எல்லாவற்றையும் பாபா  இயக்குகிறார்  என்ற மனோபாவத்தை ஏற்படுத்திகொள் . எதிலும்  அவசரப்படாதே பொறுமையாய் இரு. என் மீது  உன் பாரத்தை இறக்கு, நான் சுமக்கிறேன்.  என் மீது முழு நம்பிக்கை வைத்து  நீ செய்யும்  அனைத்து செயல்களுக்கும் என்னை பொறுப்பாளியாக்கு உன் செயலை உன் விருப்பப்படி நான்  செய்து முடிக்கிறேன்.
    நம்பிக்கை  எனும் அச்சாணியாக என்னை  உன் மனதில் நிறுத்து.
பொறுமையாய்  வாழ்ந்து    வா.  உன்னை சேர்ப்பிக்க வேண்டிய  இடத்தில் நான் சேர்க்கிறேன். என்னை சரணடைந்து உன்னை  என்னிடம்  ஒப்படைத்துவிட்டு  என் மீது முழு நம்பிக்கை வை  உன் பாரம் மட்டும் அல்ல  உன் பாவத்தையும் நான் சுமக்க தயாராக இருக்கிறேன்.
    


No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...