Tuesday, October 15, 2013

பாரம் சுமப்பவர் அவர்!


நமது பூஜ்ய ஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி அவர்கள் குழந்தைகளை இழந்த தவிப்பில் மன சஞ்சலத்தோடு வீட்டை விட்டுக் கிளம்பி பல இடங்களில் அலைந்து, எங்கும் அவர் எதிர்பார்ப்பு பூர்த்தியாக நிலையில் நேரடியாக சமாதி மந்திரில் குடியிருந்த பாபாவிடம் போனார். அந்த இடத்தில் கால் வைத்ததுமே அவரது மனதில் அமைதி குடி கொண்டு மனம் அடங்கிப் போனது. இனம் புரியாத சக்தி தன்னை ஆக்கிரமிப்பதை உணர்ந்தார்.  அதன்பிறகுதான் சாயி பாபாவிற்க்கு இத்தகைய சக்திகள் இருக்கின்றன என உணர்ந்து இந்தியா முழுதும் பிரச்சாரம் செய்து சாயி பக்தியினை வளர்த்தார்.
       இங்கு இன்னொரு உண்மையினை தெரிந்துக் கொள்ள வேண்டும்.  எத்தகைய பிரச்சன்னையாக இருந்தாலும் அது பாபாவின் அனுமதியோடு தான் வாழ்க்கையில் நுழைகிறது.  என்ன நடந்தாலும் சரி, பாரம் சுமர்ப்பவர் அவர் என்பதை நாம் பிரிந்துக்கொள்ளவேண்டும்.
       பாரம் சுபர்ப்பவர் அவர! அவருக்குத்தான் மூச்சிறைப்பு ஏற்படவேண்டும்.  நாம் அவரோடு சும்மாதான் நடக்கிறோம்.  கோமாளி மாதிரி….அய்யோ!  அம்மா!  முடியவில்லையே என புலம்புவது வேடிக்கையாக இல்லையா?

       எனவே கவலைப்படுவதை விட்டுவிடுங்கள். என்ன நடந்தாலும் என்னையும், என் பாரத்தையும் சுமர்ப்பவர் அவர் என நினைத்து, பாபாவின் மீது சுமையினை ஏற்றி வைத்துவிட்டு பிரச்சனையை உடனடியாக மறந்துவிடுங்கள். பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் பாபாவின் செயல்கள் வெளிச்சத்திற்க்கு வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தால் பிரச்சனை தீரும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...