Sunday, July 31, 2016

சாயியின் குரல்

வெயில் அடிக்கிறது என்று நிழலுக்காக மரத்தடியில் ஒதுக்கினால், மரம் முறிந்து மேலே விழுவது போல எல்லா இடங்களிலும் துரதிருஷ்டம் உன்னை துரத்துகிறது. நமது தேவைகளும் ஆசைகளும் நம்மை இப்படி பட்ட நிலைக்கு இழுத்து சென்றுவிட்டன. இதனால் நாம் சிக்கலில் சிக்கிக்கொண்டோம், ஆகவே விதியை நொந்துகொள்வானேன். மதி சரியாக இருந்திருந்தால் இந்த கதிக்கு ஆளாயிருக்க வேண்டிய அவசியம் இல்லையே! குழந்தையே உனக்கு இளைப்பாறுதல் என்பதே இல்லை, எந்த பக்கத்தில் இருந்து எப்போது திகில் தரும் நிகழ்வுகளும் செய்திகளும் வருமோ என்கிற பயம் உன்னை சூழ்ந்து இருக்கிறது. உறவினர்களோ வாழ்வில் பொறுப்பு அற்றவர்களாக நடந்துகொண்டு இதோ உன் உள்ளத்தை காயப்படுத்தும் விதத்தில் நடந்துகொள்கிறார்கள். உன் கண்ணீரின் வலிமை அவர்களுக்கு இன்னும் தெரியவில்லை. இதோ நான் சீரழிந்து நிற்கும் உன் வாழ்க்கையை மாற்ற உன்னை தேடி வந்திருக்கிறேன். வெகு காலமாக நான் உன் பக்தியை கண்டு வியந்து மெச்சி வருகிறேன். நான் அன்பும் கருணையும், இரக்கமும் உருக்கமும் உள்ளவன் என்று உன்னால் கொண்டாடப்படுவேன்................................                                                . சாயியின் குரல்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...