Saturday, July 9, 2016

சாயி பக்தரிடம் ஏன் இந்த முரண்பாடு?



ஒரு பாபா கோயிலுக்குச் சென்றபோது,       அழுக்கு உடையுடன் வந்த ஒருவரை அவரது  ஆடைக்காகவும், குளிக்காமல் வந்தமைக்காகவும் அங்கிருந்தவர்கள் விரட்டினார்கள். இது சரிதானா? இன்னொரு சமயம் பாபா தனக்குக் கோணி தந்ததாகக் கூறிய சாமியார் ஒருவர், குளு குளு ஒட்டலில் அறை எடுத்துத் தரவேண்டும், கொசுக்கடியைத் தாங்கமுடியாது என்று அடம்பிடித்தார். இதுவும் சரியானதுதானா? சாயி பக்தர்களிடம் ஏன் இந்த முரண்பாடு?
ப்ரவீணா, சென்னை - 92

சாயி புத்ரன் பதில்கள்
உள்ளே அழுக்கை வைத்துக்கொண்டு மனத்தை பக்தியால் சுத்தப்படுத்தி குளிக்காதவர்கள்   இப்படி நடந்துகொள்வது உண்டு. பாபா கூட தொடர்ந்தாற்போல எட்டு நாட்களுக்கும் மேலாக குளிக்காமல் இருப்பார், கோணிப்பை ஆசனம் வைத்திருப்பார் என சத்சரித்திரம் கூறுகிறது. அவரையும் வெளியே இவர்கள் அனுப்பி விட்டால் நல்லது.
காசு பணத்திற்காகவும் கவுரவத்திற்காகவும் கோயில் நடத்தினால் இப்படித்தான் நடக்கும். கோணிப்பையுடன் குளுகுளு அறைதான் வேண்டும் என்று கேட்டவரை சாமியார் என்று கூறுகிறீர்கள். சாமியார் அப்படித் தான் இருப்பார். ஆன்மிகவாதிதான் அனைத்தையும் துறப்பார்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...