Saturday, July 30, 2016

சத்குரு சாய் நமோ நம

நெஞ்சில் உனை நினைக்க இன்பம் தருவோனே
தஞ்சம் நீயென வருவோரை என்றும் காப்போனே
வஞ்சம் சூது பகை முற்றாய் ஒழிப்போனே
பஞ்சம் பசி பட்டினி முழுதாய்ப் போக்குவோனே
கஞ்சம் இல்லாது உன்னருள் மிகத் தருவோனே
நெஞ்சில் உனைப் பதிப்போர்க்கு அருள் தருவோனே
அஞ்சேல் என அபயம் அளிப்போனே
அபயம் என உன் பத்ம பாதம் பணிந்தோமே..
ஓம் சாய் ....நமோ நம
.ஸ்ரீ சாய்.... நமோ நம
ஜெய ஜெய சாய் நமோ நம
சத்குரு சாய் நமோ நம



அனந்தகோடி பிரம்மாண்ட நாயக ராஜாதிராஜ் யோகிராஜ் பரப்பிம்மா
ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு சாய்நாத் மகாராஜ் கி ஜெய்....!

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...