Tuesday, July 12, 2016

ஊசி கூட உடன் வராது...

பல ஊர்களுக்கும் யாத்திரை சென்ற  குருநானக் ஒரு ஊரில் தங்கினார். அவ்வூர்  பணக்காரர்  ஒருவர் குருநானக்கை தன்  வீட்டிற்கு விருந்து சாப்பிட  அழைத்தார்.
       "இந்த ஊரிலே  பெரிய  பணக்காரன் நான் தான். நினைத்ததை சாதிக்கும் பலம்  என்னிடம் இருக்கிறது. உங்களுக்கு ஏதாவது உதவி  தேவைப்பட்டால் கேளுங்கள்" என்று பெருமையுடன் தன்னை அறிமுகப்படுத்தினார்.
             சற்று  யோசித்த குருநானக், "ரொம்ப  நல்லது அப்படியானால் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டுமே," என்று  கேட்டார்.
       " என்ன சுவாமி. .எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள். செய்ய காத்திருகிறேன் "என்றார் பணக்காரர்.
          தன் பையில் இருந்து  ஊசி ஒன்றை  எடுத்த குருநானக் ,அதை  பணக்காரரிடம்  நீட்டினார்.
        " இந்த பழைய  ஊசியைக் கொண்டு நான்  என்ன செய்ய வேண்டும் சுவாமி" என்றார் பணக்காரர்.
         " இதைப் பத்திரமாக  வைத்திருங்கள். நாம் இருவரும் மேலுலகத்தில் சந்திக்கும் போது திருப்பிக் கொடுத்தால் போதும் ," என்றார் குருநானக்.
            "இறந்த பிறகு இந்த  ஊசியை எப்படி கொண்டு வர முடியும் ."என்று கேட்டார் பணக்காரர்..
      அவரைப்  பார்த்து  சிரித்த குருநானக் ."இந்த உலகை விட்டுப்  போனால் சிறு  ஊசியைக்  கூடக் கொண்டு போக  முடியாது .என்று  நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள். ஆனால்  நினைத்ததை சாதிக்கும்  வலிமை இருப்பதாக  பெருமை பேசுகிறீர்களே.. .ஒருவன்  செய்த நன்மை  தீமை மட்டுமே  இறந்த பிறகு  கூட வரும். செல்வத்தால் யாரும்  கர்வப்படத் தேவையில்லை .அதை இல்லாதவர்களூக்கு  கொடுத்து உதவுங்கள். அதுதான் உண்மையான மகிழ்ச்சி தரும் என்று  அறிவுரை வழங்கினார்.
    பணக்காரரும்  அவரது  உபதேசத்தை  ஏற்று  தானம் செய்ய  ஆரம்பத்து விட்டார்.
இனிய வணக்கங்கள்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...