Sunday, July 3, 2016

கோபம் எனும் தீ!

 அது காட்டை ஒட்டிய ஒரு வனப்பகுதி.  அங்கு பிராணிகளிடம் மிகவும் பிரியமுள்ள ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் காட்டிற்கு வேட்டைக்குப் போனான். அழகிய புள்ளிமான் ஒன்றைப்பிடித்து வந்தான்.
மானின் அழகில் மயங்கிய அவன் மாமிசத்திற்காக அதைக் கொல்லவில்லை.  பிரியமுடன் வீட்டில் வளர்த்து வந்தான். ஒருநாள் அந்த மான் மாயமாய் மறைந்து விட்டது.  ஆனால் அது ஓடவில்லை. காணாமல் போய்விட்டது. அவனுக்கோ ஆத்திரம்.
இந்த மானை யார் பிடித்து போயிருப்பார்கள். அவன் எங்கே இருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து  பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் உருவெடுத்தது. உடனே கடவுளைத் துதித்தான்.
"கடவுளே எனக்கு தரிசனம் தா…!"
கடவுளும் வந்தார்…!
" பக்தா என்னை அழைத்ததன் காரணம் என்ன? " கடவுள் கேட்டார். அறிவாளி பக்தன் என்ன கேட்கணும்? நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்துச் சென்று விட்டார்கள். அந்த மான் மீண்டும் எனக்கு வேண்டும் என்றுதானே கேட்டிருக்க வேண்டும்ஆனால் அவன் அப்படி ஏதும் கேட்கவில்லை.  கோபம் கண்ணை மறைத்தது.
"தெய்வமேநான் ஆசையாய் ஒரு மான் வளர்த்தேன்.  அந்த மானைக் காணவில்லை.  அந்த மானைத்திருடியவன் யாராக இருப்பினும், அவன் என் முன்னே வரவேண்டும். அவனை நான் என் கோபம் தீர அடிக்க வேண்டும் ".  இதுதான் பக்தன் கேட்ட வரம்.
வேண்டுவோருக்கு  வேண்டும் வரம் தரும்  கடவுள்  பக்தனின் கோரிக்கைக்கு தயங்கினார்.
" பக்தா.. உன் மானை  வேண்டுமானால் திருப்பித் தருகிறேன்.  அது காணாமல் போனதற்கு காரணமானவர் யார் என்று கேட்காதே.
’இல்லை..என் மனம் எவ்வளவு கலங்கி இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும். அதனால் அவனை பழிவாங்காமல் விடமாட்டேன் ", என்று பிடிவாதமாகக்கேட்டான்.
" சரி..நீ கேட்கும் வரத்தைத்தருகிறேன். என் மீது வருத்தப் படக்கூடாது ".
"வருத்தம் வராது".
" சரி.. தந்தேன் வரம்’.
’உன் மானைத் திருடிச் சென்றவர் யாரோ, அவர் உன் பின்னால் நிற்கிறார்.
தண்டித்துக் கொள் ". வரத்தைத் தந்த கடவுள் மறைந்து விட்டார்.
பக்தன் திரும்பிப்பார்த்தவன் அதிர்ந்தான். அங்கே நின்றது  ஒரு சிங்கம்.
பழிவாங்கும் சினம் மறைந்தது. பயம் பிடித்து கொண்டது.  கை கால் எல்லாம்  நடுங்கத்தொடங்கியது.  கண் மண் தெரியாமல் ஓடினான்.
" கடவுளே என்னைக் காப்பாத்து.கடவுள் சிரித்தார்
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு தானே. இங்கே அவன்  அறிவு வேலை செய்யவில்லை. ஆத்திரம் கடைசியில் அழிவைத் தந்தது. தேவையில்லாக் கோபம் மனிதரின் இனிய பண்புகளைச்சுட்டு எரிக்கும் தீ. கவனம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...