Thursday, June 1, 2017

என் அன்பான குழந்தையே!

உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன் கேள்.   நான் உன்னுடன் எப்போதும் இருக்கிறேன்,  நீ்  கவலையில்லாமல் இரு. எந்த ஆபத்திலிருந்தும் நீ முற்றிலும் காப்பாற்றப்படுவாய் என்பதில் உனக்கு எந்தவிதச் சந்தேகமும் வேண்டாம். ஒவ்வொரு  வினாடியும் நான் உன்னுடன் இருக்கிறேன்.

நீ தனியாக நடக்கிறாய் என்று நீ நினைக்கிறாயா? உன் பாதை என்னால் வடிவமைக்கப்பட்டது.  நான் உன் வாழ்க்கையை உருவாக்கியவன் . நான் உன்னுடன் நடைப்பயிற்சி செய்கிறேன். நீ  சிந்தும் கண்ணீர்  மற்றும் வலிகளை நான் உண்ர்வேன்.

நானே மருந்தாகவும்,  மற்றும் நானே உன் படைப்பாளியாகவும் இருக்கிறேன்.  எனது கண்களை நன்றாக உற்றுப் பார்.  உன் வலிகளை மௌனமாகக் குணப்படுத்தி,  உனக்காக நல்ல நேரத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கிறேன். நான் உன்னைப் பாதுகாப்பேன்.  உன் மீது அன்பாக இருக்கிறேன். என் அனுமதி இல்லாமல் எதுவும் நடக்காது எவரும் எதையும் செய்ய முடியாது எந்த தீங்கும் செய்யவிடமாட்டேன்...!
                                                                                                                                                     பாபா...

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...