தேகத்தையும், மனத்தையும், புத்தியையும் ஒரு குருவுக்கு மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். அவரையே அனுதினமும் தியானிக்க
வேண்டும். தியானம் தியானிக்கப்படும் பொருளாகவும், அவரே இருக்க வேண்டும். அப்போது எங்கு
பார்த்தாலும் அந்த குருவே பிரசன்னமாவார். அந்த குரு உடலை விட்டு நீங்கி இருந்தாலும்
ஆத்மார்த்த நட்புணர்ச்சி, ஆத்மா வடிவத்தில் சிஷ்யனைச் சுற்றியே திரிந்து கொண்டிருக்கும். இவ்விதமாக குரு
சிஷ்யர்கள் பௌதீகமாயும், உடலற்றபோதும் (நிர்குண சாகாரத்தில்) ஒன்றாகச் சேர்ந்தே இருப்பார்கள். குரு ஆத்ம சொரூபனே என்ற பாவம் நிச்சயமாய் இருக்க
வேண்டும். அந்த பாவனை இல்லாத குரு பூஜை வீணாகிப்போகும். குருவின் பாதங்களே சரணம் என்றிருந்தால் குருவே பிரசன்னமாவார்.
அன்பான
சாயியின் பிள்ளையே! தடைகள்என்பவை நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்ல ஆயத்தம் செய்கிறவிசயம்.எனவே தடை வரும்போது தைரியத்தை இழந்து விடாமல்,
அடுத்த இலக்கைநோக்கிப் பாய்வதற்குத்தயாராக இருக்கவேண்டும். அதுவும் சாயி பக்தர்கள் என்பவர்கள் சாமான்யமானாவர்கள் கிடையாது. அவர்கள்
புண்ணியம் மிகுந்தவர்கள். பாவங்களும், கர்ம கெடுவினையும்தீர்ந்த ஒருவன்தான் சாயி
வழிபாட்டை எய்த முடியும் என்று பாபாவே உனக்குச் சொல்லியிருக்கிறார்.இப்போது நீ செய்யவேண்டியதெல்லாம், சோர்வை நீக்கி புத்துணர்ச்சி பெறவேண்டியதுதான்.
மனிதர்கள் போடும் தடைகள் மலைகள் அல்ல,
தாண்டுவதற்குச் சிரமமாக இருக்கும் என்று மலைத்து நிற்பதற்கு. அவையெல்லாம் மடை திறந்த வெள்ளத்தின் முன்னால் கையால் அள்ளிப் போடப்பட்டுள்ள மணல் குவியலைப் போன்றவை. உன்னை அவைதடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை தைரியமாக நினைத்துக் கொள்.. சிந்தனையை ஒருமுகப் படுத்துதைரியத்தை வரவழை.. கோழைகளைப் போலகூப்பாடு போடாமல், செயலாற்றத் தயாராகு. தடை தளர்ந்து போகும்.
பாபா என்ன சொன்னார் தெரியுமா? நீ தண்டால் எடுக்க ஆரம்பி. (கடுமையானப் பயிற்சி) பாலைப்பற்றிய கவலை (பலன் பற்றிய கவலை)உனக்குவேண்டா.…
தாண்டுவதற்குச் சிரமமாக இருக்கும் என்று மலைத்து நிற்பதற்கு. அவையெல்லாம் மடை திறந்த வெள்ளத்தின் முன்னால் கையால் அள்ளிப் போடப்பட்டுள்ள மணல் குவியலைப் போன்றவை. உன்னை அவைதடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை தைரியமாக நினைத்துக் கொள்.. சிந்தனையை ஒருமுகப் படுத்துதைரியத்தை வரவழை.. கோழைகளைப் போலகூப்பாடு போடாமல், செயலாற்றத் தயாராகு. தடை தளர்ந்து போகும்.
பாபா என்ன சொன்னார் தெரியுமா? நீ தண்டால் எடுக்க ஆரம்பி. (கடுமையானப் பயிற்சி) பாலைப்பற்றிய கவலை (பலன் பற்றிய கவலை)உனக்குவேண்டா.…