Saturday, June 24, 2017

குருவே பிரசன்னமாவார்


தேகத்தையும், மனத்தையும், புத்தியையும் ஒரு குருவுக்கு மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். அவரையே அனுதினமும் தியானிக்க வேண்டும். தியானம் தியானிக்கப்படும் பொருளாகவும்,  அவரே இருக்க வேண்டும். அப்போது எங்கு பார்த்தாலும் அந்த குருவே பிரசன்னமாவார். அந்த குரு உடலை விட்டு நீங்கி இருந்தாலும் ஆத்மார்த்த நட்புணர்ச்சி, ஆத்மா வடிவத்தில் சிஷ்யனைச் சுற்றியே திரிந்து கொண்டிருக்கும். இவ்விதமாக குரு சிஷ்யர்கள் பௌதீகமாயும், உடலற்றபோதும்  (நிர்குண சாகாரத்தில்) ஒன்றாகச் சேர்ந்தே இருப்பார்கள். குரு ஆத்ம சொரூபனே என்ற பாவம் நிச்சயமாய் இருக்க வேண்டும். அந்த பாவனை இல்லாத குரு பூஜை வீணாகிப்போகும். குருவின் பாதங்களே சரணம் என்றிருந்தால் குருவே பிரசன்னமாவார்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...