Wednesday, June 28, 2017

உதியின் சக்தியும் செயல் திறமையும்


ஒரு முறை பாலாஜியின் திவசத்தின் போது சில விருந்தினர்கள் வீட்டிற்க்கு அழைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு சமைக்கப்பட்டது. .ஆனால் சாப்பாட்டு நேரத்தில் அழைக்கப்பட்ட நபர்களை விட,  மூன்று மடங்கு வந்து விட்டனர்.

பாலாஜி மனைவி திகைத்துப் போய் விட்டாள். குழுமியுள்ள மக்களுக்கு சாப்பாடு பற்றாது என்றும், அது பற்றாது போகுமானால், குடும்பத்தின் கெளரவம் பாதிக்கக்கூடும் என்றும் அவள் நினைத்தாள். அவளுடைய மாமியார் பயப்படாதே. அது நம்முடைய உணவல்ல. சாயியினுடையது.

ஒவ்வொரு பாத்திரத்திலும் கொஞ்சம் உதி போட்டு, ஒரு துணி போட்டு மூடி, அதைத் திறக்காமலே அவர்களுக்கு  பரிமாறப்பட்டது. சாயி நம்மை இந்த அவமானத்திலிருந்து காப்பார் என்று கூறித் தேற்றினாள். மேலும் கூறியபடியே செய்தாள். சிறிது நேரத்தில் அந்த அதிசயம் நடந்தது. பரிமாறுவதற்கு உணவு எல்லோருக்கும் போதுமானதாக இருந்ததுடன், மீதமும் இருந்ததை கண்டார்கள்.

பாபாவின் அற்புதங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.பாபா நம்மை என்றும் காப்பார்.பாபாவின் மேல் நம்பிக்கையும் பொறுமையும் வையுங்கள்.அவர் நம்மை நல்வழிக்கு கூட்டி செல்வர்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...