Wednesday, June 7, 2017

நான் உன்னை பாதுகாப்பேன்!



மகனே,மகளே தான்  என்ற அகம்பாவத்தை விடுத்து, கருணை, மன்னிக்கும் தன்மை, சேவை மனப்பான்மை, அஹிம்சை போன்ற தெய்வீக குணங்களை ஒருவர் தமக்குள்  கொண்டு வர முடிந்தால்,  நான் அவர்களுடன் இருந்து வழிநடத்திச் செல்வேன்.  என்னை  முழுமையாக சரணடைந்தவர்கள்,  எனக்கு  மிகவும் நெருக்கமானவர்களாக இருப்பார்கள். 
பூஜை, புனஸ்காரங்கள், சடங்கு சம்பிரதாயங்கள் இவை யாவும் நம் மனதை நாம் தூய்மைப் படுத்துவதற்கான வழிமுறைகள் மட்டுமே. இருப்பினும், உள்மனது பரிசுத்தமானதாக இல்லையென்றால், எவ்வளவு தான் வழிபாடுகள் செய்தபோதிலும் சாயி பக்தர் என்ற தகுதியை அடைய முடியாது. தான்  என்ற அகம்பாவத்தடன் எவன் ஒருவனும் என்னைக் காணமுடியாது.
என் புனிதமான சமாதியில் என் அனுமதி இல்லாமல்  எவரையும் 
அனுமதிக்க மாட்டேன்.  என்னை சரணாகதி  அடைந்தால் உன்னை நான் பாதுகாப்பேன்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...