Friday, June 30, 2017

பாபா மிகப்பொருத்தமானவர்!


சாயி முடிவானவரோ, வரையறைக்கு உட்பட்டவரோ அல்ல.  எறும்பு, பூச்சிகள் முதற்கொண்டு பிரம்மா வரையுள்ள எல்லா ஜீவராசிகளிலும் அவர் உறைந்திருக்கிறார்.  அவர் சர்வவியாபி.  வேதஞானத்தில் நன்றாகப் பயிற்சியுடையவர்.  அங்ஙனமே ஆத்ம உணர்விலும்.  இவை இரண்டிலுமே அவர் வல்லவராகையால் சத்குருவாய் இருப்பதற்கு அவர் மிகப்பொருத்தமானவர். 
சீடர்களைத் தட்டியெழுப்பி, அவர்களை ஆத்ம உணர்வில் ஸ்தாபிக்க இயலாத யாரும், எவ்வளவு கற்றறிந்தவராக இருப்பினும், சத்குரு என்றழைக்கப்படுவதற்குத் தகுதியுடையவராகார்.  பொதுவாக இவ்வுடலை அன்னை ஈன்றெடுக்கிறாள்.  தவறாமல் வாழ்வை, சாவும் பின் தொடர்கிறது.  ஆனால், வாழ்வு - சாவு இரண்டையுமே சத்குரு அழித்துவிடுகிறார்.  எனவே மற்றெவரைக் காட்டிலும் அதிகக் கருணையும், அன்பும் உடையவராவார்.
சாயிபாபா அடிக்கடி கூறுவதாவது:  "எனது ஆள் (பக்தன்) எவ்வளவு தூரத்திலிருந்தாலும், என்னிடமிருந்து மூவாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்தாலும் காலில் நூல் கட்டியுள்ள சிட்டுக்குருவியைப் போன்று ஷீரடிக்கு இழுக்கப்படுவான்".-சாயி சத்சரிதம் அத்தியாயம்28                       

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...