Tuesday, June 27, 2017

சாயியின் உதி

துவாரகாமாயீயில்  சாய் பாபாவால் ஏற்றி வைத்த அக்னி குண்டம் இன்றும் தொடர்ந்து எரிந்துக்கொண்டிருக்கிறது. அதில் விறகுக்கட்டை போட்டு எரித்துக் கொண்டிருந்தார். அதன்முன் அமர்ந்து தினமும் தியானம் செய்வது அவர் வழக்கம்.

தன் பக்தர்களுக்கு இந்த அக்னிக் குண்டத்திலிருந்து 'உதிஎன்று அழைக்கப்படும் விபூதியை எடுத்து தருவார். அக்னி  குண்டத்திலிருந்து எடுக்கும் போது வேண்டுமானால் அது சாம்பலாக இருக்கலாம்.

பகவான் சாயியின் ஸ்பரிசம் பெற்ற பிறகு இந்த உதி மிகவும் சக்தி வாய்ந்ததாகிறது. எல்லாவித ஊழ் வினைகளையும், வியாதிகளையும் போக்கவல்லது. தினமும் குளித்தபின் உதியை நெற்றியில்  இட்டு கொண்டும், கொஞ்சம் நீரில் கலந்தும் சாப்பிட்டால் உடல் நோய் நிவாரணம் தரும்.

பாபா மக்களுக்கு கூறிய பொதுவான உபதேசம் நம்பிக்கையும், பொறுமையும் ஆகும். அவர் மேல் நம்பிக்கை வைத்து நம் வேண்டுதலை சொன்னால், பாபா அதை நிறைவேற்றி வைப்பார்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...