Wednesday, June 14, 2017

என்றும் உன்னை நான் காப்பேன்!!!

என் அன்பு குழந்தையே!
உன்னைக்கரை சேர்க்கத்தான் நான் இங்கு சில நிகழ்வுகளை நடத்திக் கொண்டு இருக்கிறேன்.  அதைப் புரிந்து உன் வேலையை நீ சரியாக செய். அலட்சியமாக இருக்காதே. உன்னிடம் முன்னேற வேண்டும் என்ற எண்ணம், எண்ணமாகத்தான் உன்னிடம் இருக்கிறது. அதை நீ செயலில் செய்ய மாட்டேன் என்கிறாய்.
எல்லாம் உன் வசம் வரும் காலத்தை நீ நெருங்கி விட்டாய்.  இந்த நேரத்தில் உன் மனதில் வேறு எந்தவிதமான அலட்சியமான எண்ணத்திற்கும் இடம் கொடுக்காதே.  உன்னை உன் வாழ்வில் உயர்த்திக் காட்டத்தான், உனக்கான நேரத்தைத் தர நான் இங்கு போராடுகிறேன். 
என் பிள்ளை பொறுப்பானவனாக,  அவன் வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம்.  உன் அலட்சியப் போக்கை தூக்கி வெளியே எறி.  உன் வாழ்க்கையில் நிச்சயம் நீ வெற்றி பெறுவாய்.  உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை. விலகிப் போகும்படி நான் செய்வதும் இல்லை.  உன் அம்மாவாக, அப்பாவாக என்றும் உன்னை நான் காப்பேன்!!!
இப்படிக்கு
உன் சாய் அப்பா!!!

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...