Wednesday, January 22, 2014

கூப்பிட்டு உதவி செய்வார் பாபா!


பாபா எவர்களுக்கு எல்லாம் கிருபை செய்ய விரும்புகிறாரோ அவர்களிடம் எல்லாம் பலவிதமான மாறு வேஷங்களில் தோன்றுகிறார்.  கணக்கற்ற அற்புதங்களைத் திட்டமிட்டு நிறைவேற்றுகிறார்.  அவரை தியானத்தாலும் பிரேமை பொங்கும் பஜனையாலும் அணுக முயல்பவருடைய தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி அவர்களைப் பாதுகாக்கிறார்.  எவர் இந்த நாட்டிலும், வெளி நாடுகளிலும் தொழப்படுகிறாரோ, எவருடைய பக்திக்கொடி வானளாவிப் பறக்கிறதோ, அவர் தீனர்களையும் பலவீனர்களையும் தம்மிடம் அழைத்து அவர்கள் அனைவரின் விருப்பங்களையும் நிறைவேற்றுவார்.


சாயிதரிசனம் இதழிலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...