Wednesday, January 29, 2014

வில்வ மரம்

வீட்டில் வில்வ மரம் நல்லதா?

எங்கள் வீட்டில் பூஜைக்காக விலவ மரம் வைத்து பெரிய மரமாக வளர்ந்துள்ளது.  தேக்கு மரம் ஒன்றும் உள்ளது. வில்வ மரமும் தேக்கு மரமும் வீட்டிலிருப்பது நல்லது இல்லை என்று கூறி வீட்டினை விற்க இயலாமல் தடை ஏற்படுகிறது. இது உண்மையா? எங்கள் குழப்பத்தை தீர்த்து வைக்கவும்....

ஏ.பத்மினி வேலூர்

எங்களுக்குத் தெரிந்தவர்கள் இப்படித்தான் வில்வ மரம் வளர்கிறது என வீட்டை விற்றுவிட்டார்கள்.  அந்த வீட்டின் முகப்பில் ஒரு சிறிய கடை வைத்திருந்தவர் அந்த வீட்டினை வாங்கினார்.  சில காலத்திற்க்குள் கடையும் பெரிய அளவில் வளர்ந்து இருக்கிறது. வில்வ மரத்தை ஒதுக்கிவிட்டு மீதி இடத்தில் மிகப் பெரிய பிளாட் கட்டியுள்ளார்.. அதாவது அந்த அளவிற்க்கு அவருக்கு வசதியும் வந்திருக்கிறது.

ஆகவே, வீட்டை விற்கும் எண்ணத்தை விட்டுவிட்டு உங்கள் மகனின் விருப்பப்படி பிளாட் கட்டுங்கள்.  கடனும் அடையும்.  பொருளாதாரமும் மேலோங்கி வளரும்.  ஒரு வேளை கண்டிப்பாக அந்த மரத்தை எடுத்தே ஆகவேண்டும் என்றால் இன்னொரு வில்வக்கன்றை வைத்து வழிபாடு செய்ய ஆரம்பித்தபிறகு இதை எடுக்கலாம் என்கிறார்கள் பெரியோர்கள்.  அருகில் உள்ள சிவன் கோயிலில் கேட்டு செயல்படுங்கள்.

சாயி புத்ரன் பதில்கள்


சாயிதரிசனம் இதழிலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...