Thursday, January 2, 2014

திருமணம் நடக்கும்!





     என் மகளுக்கு நீண்ட காலமாக திருமணம் தள்ளிக்கொண்டே இருந்தது.  பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தில் வேண்டிக்கொண்டால் வேண்டுதல் நடக்கும் என என் உறவினர் ஒருவர் கூறினார்.  அவர் வைத்திருந்த சாயி தரிசனம் பத்திரிகையினைக் கொடுத்து அனுப்பினார்.
     விலாசத்தினைத் தேடி சிரமப்பட்டு வந்து, பெருங்களத்தூர் சாயியிடம் பிரார்த்தனை செய்தேன்.  அப்போது, உன் மகளுக்கு திருமணம் நடக்கும் என்றார் சாயி.  என் மகளுக்கு திருமணம் நடந்தால் பிரார்த்தனை மையத்திற்க்கு பத்தாயிரம் தருவதாக வேண்டிக்கொண்டேன்.
     இவ்வளவு காலமாக எத்தனையோ பரிகாரச் செயல்களில் ஈடுபட்டு வந்தேன்.  பத்து பைசா செலவில்லாமல், வேண்டிக்கொண்டு வந்த மறு வாரத்திலேயே நல்ல வரன் கிடைத்தார்.
     ஜாதகம் முக்கியமில்லை, பெண் குணவதியாயிருந்தால் போதும் என்றனர்.  மாப்பிள்ளை நல்ல குணமும், வருவாயும் உள்ளவர். என் மகளுக்கு சிரமமில்லாமல் நடந்தது.
     முதல் பத்திரிகையினை பெருங்களத்தூர் பாபாவிற்கு அர்ப்பணித்து, நான் நேர்ந்துக்கொண்ட காணிக்கையினை செலுத்தினேன்.  சாயி தரிசனம் பத்திரிகை பலருக்குக் கிடைத்தார் என் போன்று பலரும் நன்மை அடைவார்கள் என்பதை திடமாக உணர்ந்திருக்கிறேன்.



-          கே.வி.தேவராஜன், அண்ணாநகர், சென்னை - 40

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...