Thursday, January 23, 2014

முழுமையான நம்பிக்கை



பாபா நமக்குள்ளிருந்து செயல்படும்போது குதர்க்கமான எண்ணங்கள் நம்முள்ளிருந்து எழலாம்.  அவற்றை அறவே விடுத்து அவரது திருப்பாதங்களை முழுமையாக சரணடைந்து விடுங்கள்.  ஒருமுகப்பட்ட மனத்தில்தான் சாயி சிந்தனை தொடரும்.  இதைத்தான் சாயி நம்மைச் செய்ய வைக்கிறார்.  நம்மால் எடுத்த எந்த ஒரு காரியமும் தடங்கல் இல்லாமல் நிறைவேறிவிடும்.

சதா நேரமும் சாயி சாயி என்று நினைப்பீர்கள் என்றால், அவர் உங்களுக்குப் பலவித அனுபவங்களை அளிப்பார்.  அவர் விரும்பிய வேஷத்தை அணிந்து எங்கு நினைக்கிறாரோ அங்கெல்லாம் தோன்றுகிறார்.  பக்தர்களுக்கு மங்களம் அருள்வதற்காக எங்கெல்லாமோ அலைகிறார்.  பக்தருக்குத்தான் அவரை அடையாளம் கண்டுகொள்ள முழுமையான நம்பிக்கை வேண்டும்.


சாயிதரிசனம் இதழிலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...