Sunday, January 26, 2014

மாறாத பிரேமை


ஒரு முறை சாயியைப் பிரேமையுடன் நோக்கினால் , அவர் ஜன்மம் முழுவதற்கும் நம்முடையவர் ஆகிவிடுகிறார்.  மாறாத பிரேமையை அல்லாமல் வேறெதையும் வேண்டாதவர் அவர், நாம் கூப்பிடும்போது காப்பாற்ற ஓடி வருகிறார்.  அந்த நேரத்தில் காலமோ, நேரமோ அவருக்கு குறுக்கே நிற்கமுடியாது.  சதா சர்வ காலமும் அவர் நமக்குப் பின்னால் உறுதியாக நிற்கிறார்.  அவர் எங்கு எவ்வாறு எந்த விசையை இயக்குவார் என்று நமக்குத் தெரியாது.

அவரது செயல்கள் புரிந்துக்கொள்ளமுடியாதவை.  பத்துத்திசைகளிலும் வியாபித்திருக்கும் கற்பகத் தருவைப் போன்று நேரிடையாகவும் மறைமுகமாகவும் வரங்களை அள்ளி வீசுபவர் பாபா.  கற்பனை செய்தும் பார்க்க முடியாத லீலைகளால் பக்தர்களுக்கு மங்களம் அளிப்பவர்.




சாயிதரிசனம் இதழிலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...