Monday, July 10, 2017

பாபாவின் குரல்



என் கண்ணின் மணியான செல்லமே!
நீயாக என்னைத் தேடி வரவில்லை குழந்தாய். எந்த தெய்வத்திடம் நம் கஷ்டங்களை எல்லாம் சொல்லி அழுவது என்று மருகி நீ நின்ற போது,  நான் இருக்கிறேன் என்று திருவிழாவில் தொலைந்த குழந்தையைத் தேடும் தாயாய், நான் தான் உன்னைத் தேடி வந்தேன்.
அந்த அளவிற்கு நான் உன்னை நேசிக்கிறேன். உன் பூர்வ புண்ணியம் மிகவும் பெரிது குழந்தாய். உன் மூதாதையர்கள் மற்றும் உன் தாய், தந்தை செய்த புண்ணியங்கள் நிறைய. அதனால்தான் நான் உன்னைத்தேடி வந்தேன். நான் உன்னுடன் எப்போதும் இருக்கையில் நீ எதற்குமே கலங்கக்கூடாது. உனக்கு வேண்டியதை நான் செய்வேன்.
என் குழந்தைகளின் நல்வாழ்வுக்காகவே  அவதரித்து வந்தவன் நான். நீயோ, நான் தேடிக் கண்டுபிடித்த புதையல். இந்த புதையலை திரும்பவும் மண்ணில் வீசி எறிய விடமாட்டேன். இந்த சாயியின் கஜானாவில் உன்னைக் கண்ணின் மணியாகப் பாதுகாப்பேன்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...