Sunday, July 9, 2017

அதிகாலை ஆரத்தி



அதிகாலை சுபவேளை ஆரத்தி ஏற்க உனை நாடி
இசைபாடி வந்தோமே பார்க்க
அதிகாலை சுபவேளை ஆரத்தி ஏற்க உனை நாடி
இசைபாடி வந்தோமே பார்க்க --குரு சாயிராமா

உனது பாதம் சரணடைந்தோம் உனது நாமம் பாடுகின்றோம்
உனது பாதம் சரணடைந்தோம் உனது நாமம் பாடுகின்றோம்
வினைகள் நீக்கும் உந்தன் பார்வை
உனையே நோக்கும் எங்கள் வாழ்க்கை -பாபாவே சாயிராமா
அதிகாலை சுபவேளை ஆரத்தி ஏற்க உனை நாடி
இசைபாடி வந்தோமே பார்க்க --- குரு சாயிராமா

சித்தம் என்னும் விளக்கை ஏற்றி
பக்தி நெருப்பை பற்றவைத்தோம்
சித்தம் என்னும் விளக்கை ஏற்றி
பக்தி நெருப்பை பற்றவைத்தோம்
ஷீரடியின் செல்வமே நீ
யோக நித்திரை நீங்குவாயே --பாபாவே சாயிராமா
அதிகாலை சுபவேளை ஆரத்தி ஏற்க உனை நாடி
இசைபாடி வந்தோமே பார்க்க -- குரு சாயிராமா

எமது தாயும் தந்தையும் நீ இதயம் வாழும் தெய்வமும் நீ
எமது தாயும் தந்தையும் நீ இதயம் வாழும் தெய்வமும் நீ
அருளும் பொருளும் அள்ளித்தருவாய்
புனித முனிவா நேரில் வருவாய் ---பாபாவே சாயிராமா
அதிகாலை சுபவேளை ஆரத்தி ஏற்க உனை நாடி
இசைபாடி வந்தோமே பார்க்க --குரு சாயிராமா

தேவர் மூவர் தேடி வந்த போற்றிப் பாடி புகழுகின்ற
தேவர் மூவர் தேடி வந்த போற்றிப் பாடி புகழுகின்ற
சாயிநாதா சத்யதேவா  ஆலவாக சுப்ரபாதா   
                                                        --  பாபாவே சாயிராமா 
அதிகாலை சுபவேளை ஆரத்தி ஏற்க உனை நாடி
இசைபாடி வந்தோமே பார்க்க - குரு சாயிராமா

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...