Friday, July 21, 2017

எல்லாம் உன்னை வந்து சேரும்!



என் அன்புக் குழந்தையே!
”ஏன் அப்பா, என் மனம் அங்கும் இங்கும் அலைகிறது? ஒரு நிலையில் நில்லாமல் பலவாறாக ஏன் யோசிக்கிறது?  ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தினால், இன்னோரு விஷயம் ஏன் என் ஞாபகத்திற்க்கு வருகிறது,  ன் நினைவு என்பது ஓர் இடத்தில் இல்லாது சுற்றி கொண்டே வருகிறது” என்று நீ என்னிடம் அடிக்கடி புலம்புகிறாய்.
என் செல்லக் குழந்தையே, உன் கேள்வி எனக்குச் சிரிப்பை ஏற்படுத்துகிறது, உன் மனம் மற்றும் புத்தி என்பது எல்லாம் நிறைந்து நினைவில் இருக்கும் ஓரு விஷயத்தை மறந்து, புதிதாக இன்னொரு விஷயத்தை நீ யோசிக்கும் போது, அந்த இன்னொன்றின் ஞாபகம் வரத்தான் செய்யும். 
அதைத்தான் உனக்கு உன் மனம் சஞ்சலம் அடைகிறது என்று நான் கூறுகிறேன், உன் மனதை,  உன் சாய் அப்பாவின் பால் முழுமையாகத் திருப்புவதின் மூலம்,  மனம் சஞ்சலம் அடைவதைத் தவிர்க்க முடியும்.
உன்னை மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று வேதனை அடையாதே. ஓரு நாள் அவர்களே உன்னைப்புரிந்து, எங்கிருந்தாலும் உன்னைத்தேடி வருவார்கள். உனக்கான காலம் வரும். அது வரை காத்திரு. நிச்சயம் எல்லாம் உன்னை வந்துச் சேரும், உன் அம்மாவாக அப்பாவாக என்றும் நான் துணை நிற்பேன் !!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...