"மற்றவர்கள் உன்னை எத்தனை வழிகளில் வசைபாடினாலும் கண்டனம் செய்தாலும், நீ
அதை எதிர்த்து கசப்பாகவோ, மனம் புண்படும்படியாகவோ ஏதும் பேசாதே. அதை பொறுமையுடன் சகித்துக்
கொள்வாயாக; அதனால், உனக்கு அபாரமான சுகம் கிடைக்கும். உன் கர்மாவை அவர்கள் பெற்றுக்
கொள்கிறார்கள். ஷீரடி பாபா
என் குழந்தைகளாகிய உங்களுக்கு ஒன்று சொல்ல
கடமைப்பட்டிருக்கிறேன். எப்போது நீங்கள் சாயியை சரணடைந்தால் நமது கஷ்டங்கள்
தீர்ந்துவிடும் என்று என்னை நம்பி இந்த
ஆலயத்தில் காலடி எடுத்து வைத்தீர்களோ, அப்போதே நான் உங்களுக்கு கடன்
பட்டவனாகின்றேன். நிச்சயமாக உங்களை கரையேற்றுவேன். ஆனால் அதற்கு நான் உங்களிடம்
அறிவுறுத்திச் சொல்வது பொறுமையும், நம்பிக்கையுமாக இருங்கள்
என்பது தான். எதையுமே உடனே அடைந்து விட முடியாது. பொறுமை வேண்டும்.
No comments:
Post a Comment