Sunday, July 30, 2017

என்றும் துணை நிற்பேன்!!!



என் அன்புக்குழந்தையே!  
உன்னை நான் என் வசம் வழிப்படுத்தியது இந்த ரு ஜென்மத்தில் மட்டும் அல்ல. ஏழேழு ஜென்மாய், உன் சாய் அப்பா, நான் உன்னுடன் வாழ்க்கையில் எப்போதும் பயணிக்கிறேன். என் குழந்தைகள் சொல்லித்தான், அவர்கள் பிரச்சினைகளும் துன்பங்களும், உன் சாய் அப்பாக்கு தெரியவரும் என்று நினைக்கிறாயா? உன் அப்பா நான் அகண்டமாக இந்த உலகத்தில் இருக்கையில், நடக்கின்ற எல்லா விஷயங்களையும் நான் அறிவேன்.
உன் வாழ்க்கையில் இருந்து கோபத்தைத் தூக்கி எறி.  பொறுமையைக் கடைப்பிடி. யார் உன்னை அவமானப்படுத்தினாலும், வாக்குவாதம் செய்யாமால், நீ அமைதியாக இரு. மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன். உனக்கான காலம் வந்து விட்டது. நீ நிச்சயம் வெற்றி பெற்று, நிம்மதியுடன் வாழ்வாய். உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை, உன்னை விலகிப்போகும்படி நான் செய்வதும் இல்லை. உன் அம்மாவாக அப்பாவாக என்றும் துணை நிற்பேன்!!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...