Saturday, July 8, 2017

இரண்டு நிமிடம் என்னையே பார்!




இரண்டு நிமிடம் என்னையே பார்!   இப்போது உன் மனநிலை எவ்வாறு உள்ளது!  அன்பிற்காகவும் பாசத்திற்காகவும் நீ ஏங்குவதை நான் அறிவேன்!
நீ தேடிச்செல்வதை விட உன்னைத் தேடிவருவோர் மீது அதிகம் அன்பு செலுத்து!  இன்று உன்னிடம் அன்பாக இருப்பவர்கள், இது வரை காட்டியது வெறும் வேஷம் என்று நாளை ஒருவேளை உனக்குத் தெரிந்தால்,தை உன்னால் தாங்க முடியாது!  அதனால்தான் முன் கூட்டியே எச்சரிக்கிறேன்!
இது ஒரு மாயை உலகம். எல்லா விதமான மனிதர்களும் இருக்கத்தான் செய்வார்கள்!  உனக்கு எது தேவையோ அதை மட்டும் எடுத்துக்கொண்டு தேவை இல்லாததை தூக்கி வீசி எறிந்து போய்கொண்டே இரு!   அப்படி இருந்தால்தான், எதற்காக வருத்தப்பட்டாயோ, அதுவே உன்னைத் தேடி வரும் அதுவரை நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் காத்திரு!

சாயின் குரல் !

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...