சாயிராம், என் குழந்தை பிறந்த நேரம் சரியில்லாமல் போனதால்தான், என் கணவர் குடும்பம் கஷ்டத்திற்கு ஆளானதாக பேசிக் கொள்கிறார்கள். இதனால் என் மாமியார், நாத்தனார்கள், கணவர் உட்பட குழந்தையை வெறுக்கிறார்கள். இவ்வாறு நடப்பது உண்மையானதுதானா? இதற்குப் பரிகாரம் உண்டா?
(பிரமிளா தேவி, கோயமுத்தூர்)
அந்தக் காலம் தொட்டு இப்படிப்பட்ட நம்பிக்கைகள் நிலவி வருகின்றன. ஒரு குடும்பம் நன்றாக இருப்பதும், கெட்டுப் போவதும் பூர்வ புண்ணியங்களின் அளவைப்பொறுத்தே நடக்கின்றன என்று திடமாக நம்புகிறோம்.
அதேபோல, ஒருவர் செய்கிற பாவம் ஏழு தலைமுறைகளை பாதிக்கும் என நம்புகிறோம். உங்கள் கணவர் குடும்பத்தாரில் ஏழு தலை முறையில் யார் இப்படி பாவம் செய்தார்களோ, அந்தப் பாவத்தின் விளைவை உங்கள் கணவர், பிள்ளை வரை அனுபவிக்கிறார்கள். பிறந்த குழந்தைக்கு மட்டும் இதில் பங்கிருப்பதாக சொல்ல முடியாது.
No comments:
Post a Comment