Thursday, June 26, 2014

நாம ஜெபம் செய்யுங்கள்!



bigsai



தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பார்கள். ஒருவனுக்கு ஏற்படும் நல்லதுக்கும், கெட்டதுக்கும் அவன் எண்ணம் சொல், செயல் மூன்றுமே காரணம். இறுதியாக அவனது கர்மம்தான் காரணம்.



கர்மத்தை ஒழுங்கு படுத்தினால் அதாவது நல்ல கர்மம் செய்துவந்தால் நல்லதுதான் நடக்கும். நடந்து விட்ட கர்மவினையைக் குறைப்பது எப்படி? கர்மவினையை மனிதனாலோ உடம்பாலோ கஷ்டப்பட்டு, வேதனைப்பட்டு அவமானப்பட்டு துடைத்துவிட வேண்டும். ஆனால் நிச்சயம் அதன் தாக்கத்தை குறைக்க முடியும்.



கஷ்டம் வந்துவிட்டால் மனம் குழம்பும். யார் யார் என்ன சொல்கிறார் களோ அதையெல்லாம் செய்யத் தோன்றும். மனம் சோர்வுறும். செயல் படத்தோன்றும். மனிதன் நிர்க்கதியாகி விட்டது போல் நினைப்பான். இந்த நேரத்தில் சத்சரிதத்தில் சொல்லியது போல் வெறுப்புணர்வை நீக்கி, சித்தத்தை மயங்கவிடாமல் ஒன்றில் நிலை நிறுத்தும் சாதனம்தான் நாம ஜெபம். சாயி நாம ஜெபம். இதைத் தொடர்ந்து செய்து பாருங்கள். உங்கள் கர்ம வினை படிப்படியாகக் குறையும்.



இரண்டாவது தான தர்மம் செய்தல். தனது சக்திக்கு உட்பட்டு செய்தல், மிகவும் எளியது தினமும் ஓர் உயிர்க்கு உணவளித்தல்.



மூன்றாவது மகான்களின் தரிசனம். சாயி பகவானை தரிசித்தல், திருவடி தரிசனம், திருமுக தரிசனம். திருவடித் தியானம், ரூப தியானம். இவை மிகமிக எளிய முறை.



நான்காவது ஆலய தரிசனம். அங்கே பிரார்த்தனை. ஒரு மனிதன் தன்னிடமுள்ள பிரச்சினையை பாபாவிடம் சொல்லலாம். அவர் காது கொடுத்துக் கேட்பார். அவர் செவிடு அல்ல, உனக்கு நல்ல அற்புதமான சிக்கலற்ற தீர்வைத் தருவார்.



இதைவிட்டு யோகம், யாகம், தியானம் என்ற பெயரில் மூக்கு நுனியைப் பார்த்தல், தீபத்தை உற்று நோக்குதல், காசைக் கண்டபடி வாரியிறைத்து கண்ட கண்ட பயிற்சிகளை எல்லாம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். இது மிக மிக ஆபத்தானது. இவற்றை செய்யவே கூடாது.



ஓர் இளைஞர் தூக்கம் வருவதற்காக இன்டர் நெட் பார்க்க ஆரம்பித்தார், சி.டி போட்டு பார்த்தார். தற்போது தூக்கம் வராமல் அவதிப்படுகிறார். நமது மூளை மிகவும் அற்புதமானது. அதை அனாவசியமாக தொந்தரவு செய்யக்கூடாது.



எனக்குத் தெரிந்தவரை எல்லாவற்றிற்கும் உன்னதமான பயிற்சி நாம ஜெபம். அதிலும் உன்னதமானது சாயி நாமம். நல்லது எல்லாம் தரும் நாமஜெபம்.  சகலமும் தரும் சாயி நாமம். சாயி நாம ஜெபம் செய்வோம்,



சந்தோஷமாய் இருப்போம்.



சாயிராம்!  சாயிராம்!  சாயிராம்!



கு.இராமச்சந்திரன்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...