Sunday, June 29, 2014

மதுப்பழக்கம் மறைந்தது!

bless



2009 நவம்பர் முதல்வாரத்தில் முதன் முதல் சீரடிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன்பு என்னிடம் மது அருந்தும் பழக்கம் இருந்தது. சீரடிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்த பிறகு பாபாவை முழு மனத்தோடு நம்பினேன்.



”சீரடி ஸ்தலத்திற்கு வந்து தங்களை தரிசித்து ஊர், திரும்பிய பிறகு மதுப்பழக்கத்தை என் மனத்திலிருந்து நீக்கிவிடவேண்டும்!” என்று வேண்டினேன். அதை நிறைவேற்றினார். இந்த நான்கு ஆண்டுகளில் அந்த எண்ணமே என் மனதில் ஏற்படவில்லை. அன்று முதல் அவர் என்னோடு இருப்பதை உணர்கிறேன்.



இந்த நான்கு ஆண்டுகளில் ஒன்பது முறை சீரடிக்குச் சென்று வந்திருக்கிறேன். இரண்டு வருடங்களாக எனது பிறந்த நாள் அன்று பாபாவை தரிசிக்கும் பக்தர்கள் வயிறார சாப்பிட அன்னதானம் செய்து வருகிறேன். அதுவும் அவர் என் மனதில் அப்படிப்பட்ட எண்ணத்தை ஏற்படுத்தியதால்தான்.



கரூரில் ஒரு பாபா ஆலயம் உள்ளது. அங்குதான் என் பிறந்த நாளின் போது அன்னதானம் செய்கிறேன். சென்ற மாதம் எனது நண்பரை சீரடிக்கு அழைத்துச்சென்றேன். படிப்படியாக பலரை சாயி பக்திக்குள் வழிநடத்துகிறேன்.



சாயி தரிசனம் புத்தகத்தில் பாபா ஆலயம் அமைக்க உதவி கேட்கப்பட்டதில், எனக்கும் ஒரு சந்தர்ப்பத்தை தந்தார். இடம் அமைந்து விட்டதாக அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி.



சீரடியில் இருப்பதைப்போலவே இந்தக் கோயிலும் அமைய வேண்டும் என பாபாவை வேண்டிக்கொள்கிறேன். பாபா கோயில் கட்ட ஆகும் மொத்த சிமெண்ட் செலவை நானே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் என் மனதில் இருந்தாலும், நிரந்தர வேலையோ, போதிய வருமானமோ இல்லாதது ஒரு குறையாக உணர்கிறேன். எனது சக்திக்கு ஏற்றவாறு 25 மூட்டை சிமெண்ட் வாங்கித் தரவுள்ளேன்.



பாபாவுக்கு மிகக் கடமைப்பட்டுள்ளேன். என் மனதிலும் சில எண்ணங்களை நினைக்க வைத்து சில செயல்களையும் செய்ய வைத்த என் பாபாவுக்கு நன்றி. தற்சமயம் பாபா கோயிலில் சேர்ந்து சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தையும் பாபா நிறைவேற்றி விட்டால், அதை விட பாக்கியம் இவ்வுலகில் எனக்கில்லை.



டி.எஸ். கணேஷ்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...