சாயி பக்தர் ரேகே, 1922 ல் மாதவநாத் மகராஜ் என்ற சத்குருவை சந்தித்தபோது, சாயி வடிவில் அவரைக் கண்டு சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். அவரை எடுத்து, அருகில் அமர்த்திய மாதவநாத், உன்னை பாபா தன் செல்லக் குழந்தையாக ஏற்றுக்கொண்டபோது, நானும் அங்கிருந்தேன் என்று கூறி, அவர்களிடையே நடந்த உரையாடல்களையும் எடுத்துக்கூறினார்.
பாபாவுக்கு எண்ணெய்த் தேய்த்து குளிப்பாட்டும் சேவையை ரேகே செய்வார். தனக்கும் அவ்வாறே எண்ணெய்த் தேய்த்து குளிக்கவைக்க வேண்டும் என்று மாதவநாத் கேட்டுக்கொண்டார்.
இதைக் கண்ட அவரது பக்தர் கள், தங்களிடம் ரேகே எத்தகைய இடத்தைப் பெறுகிறார் எனக் கேட்டார்கள். உடனே மகராஜ், ”நீங்கள் யாவரும் என் அருகில் இருக்கிறீர்கள். ஆனால் இவனது இடமோ இங்கே” என தன் இதயத்தைக் காட்டினார்.
அவர் ரேகேயிடம், உலகத்தில் மிகச்சிலருக்கே கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டமான பிரேம சாகரம் உனக்குக் கிடைத்திருக்கிறது. பாபா உன் அன்னையானால் நான் உனது வளர்ப்புத் தாய் என்று கூறினார் மகராஜ்.
No comments:
Post a Comment