Monday, June 9, 2014

காந்தி தரிசித்த மகான்!

12

உபாசினி மகராஜ் பாபாவால் விரும்பப்பட்டவர். பலவேளை பட்டினி (உபவாசம்) இருந்து, வேத பாராயணம் செய்ததால், காசிநாத் என்கிற அவர், உபாசினி பாபா என அழைக்கப்பட்டார்.

உபாசினி பாபா, தன்னை எப்போதும் உயர்வாக நினைத்துக்கொள்வார். பிறரிடம் அதிகமாகப் பேசமாட்டார், சேரவும் மாட்டார். பாபாவும் அவர் தனித்திருப்பதையே விரும்பினார். பாபா அவர் மீது அதிக அன்பு கொண்டதைக் கண்டு சகபக்தர்களுக்குப் பொறாமை. சில பல தொல்லை தந்தனர்.

ஒருமுறை, சாப்பாட்டு விடுதி நிர்வாகி, பலர் மத்தியில் உபாசினியிடம், ”நாளை முதல் நீர் இங்கு சாப்பிட வர வேண்டாம்” எனக் கூறிவிட்டார்.

கோபம் கொண்ட உபாசினி ”இன்று மட்டும் எதற்கு சாப்பாடு?” என்று கூறி, வெளியே சென்றுவிட்டார். அதன் பிறகு இரண்டு மூன்று நாட்கள் சாப்பிட எதுவும் கிடைக்காமல் பசியால் வாடினார். சில சமயம் சொற்ப உணவு கிடைக்கும். பல சமயம் பட்டினியாக இருப்பார்.

இந்த நிலையைக் கண்டு இவரை கேலி செய்வதற்காகத்தான் பக்தர்கள் இவரை உபாசினி என்று அழைத்தார்கள். பட்டினி கிடந்ததால், மூலம், பவுத்திரம், மலச்சிக்கல் என பலவித உபாதைகள் வந்தன. இவை தன்னைப் பக்குவப் படுத்தவே பாபாவால் தரப்பட்டன என்பதை பின்னாளில் உணர்ந்துகொண்டார் உபாசினி.

மற்ற பக்தர்கள் பாபா வெளிச்சத்தால் வெளியே தெரிந்தார்கள். ஆனால் உபாசினி மகராஜ் மட்டும், சகூரி என்ற இடத்திற்கு சென்று, மிகப் பெரிய அறக்கட்டளை நிறுவி மிகப்பெரும் சக்தியாக சேவை செய்தார்.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் இவரை மகாத்மா காந்தி தரிசித்து சென்றிருக்கிறார்.

வித்தியாசமான அணுகுமுறை, முற்போக்கு சிந்தனை ஆகியவை இவருக்குப் பெரிய அளவில் கெட்ட பெயரை ஏற்படுத்தின. இதனாலும் இவர் இன்னலுக்கு ஆளானார். அப்படியிருந்தும், இன்றும் அவரது சமாதி புனிதமானதாக வணங்கப்படுகிறது. அவருக்கென பக்தர்கள் உள்ளனர்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...