Sunday, June 8, 2014

பாபா மஹா பரோபகாரி

3ac3f-shirdi_sai_baba-shamadhi-1

பாபா மஹா பரோபகாரி. அவருடைய பெருந்தன்மையை எவ்வாறு வர்ணிப்பேன்? வெளிப்பார்வைக்கு உக்கிரமாகத் தோன்றிய போதிலும், உள்ளே இளகிய மனமுடையவர்.

அவருடைய பெருமை அளவிடமுடியாதது. தன்னுடைய அஹம்பாவத்தை விடுத்து, வாக்கு அவருடைய பாதங்களைப் பணிந்தால்தான் பெருமையை விளக்கும் சக்தியைப் பெறும்.

இறைவன் இப் பிரபஞ்சமெங்கும் நிறைந்து நிற்கின்றான் என்பதை நிரந்தரமாக உணர்ந்தவரால் யாரை விரோதியாகப் பார்க்க முடியும்?
சிருஷ்டியனைத்தையும் பத்துத் திசைகளையும் நமக்கு முன்னேயும் பின்னேயும் இறைவன் வியாபித்திருக்கும்போது, யார்மீதும் வக்கிரமான பார்வை அவருக்கு வருத்தமளித்தது.

தம்மளவில் பூரணமான துறவியாக இருந்தபோதிலும், பக்தர்களுக்கு போதனையளிப்பதற்காகவும் நல்வழி காட்டுவதற்காகவும் இல்லறத்தாரைப் போல நடந்துகொண்டார்.

ஓ, இந்த மஹாத்மாவின் தன்னடக்கந்தான் என்னே! அதை விவரித்தால், கேட்டு ஆச்சரியப்படுவீர்கள். கேட்டால், பக்தர்களின்மீது அவருக்கிருந்த அன்பும் அவதார நோக்கம் நிறைவேறியதும் அறியப்படும்.
தீனர்களிடம் அவருக்கிருந்த தாயன்பு இணையற்றது; அவர் நைச்சிய பாவத்தையே (அடியார்க்கும் அடியேன் பண்பையே) விரும்பி நாடினார். இதைத் தெளிவுபடுத்தக் கோடானுகோடி கதைகள் சொல்லமுடியும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...