Saturday, June 28, 2014

சிறு வயதுக் கனவை நிறைவேற்றிய பாபா!

 face



திருச்சியில் வசித்து வருகிறேன். எனது மகள் ஜி. பாரதி சென்ற ஆண்டு பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 1125 மதிப்பெண் பெற்றாள்.



டாக்டராக வேண்டும் என்பது அவளது சிறுவயது கனவு. எனவே எம்பிபிஎஸ் கவுன்சிலிங் மட்டுமே விண்ணப்பித்தோம். வேறு எதற்கும் விண்ணப்பிக்கவில்லை.



கவுன்சிலிங் தேதி வேறு தள்ளிக் கொண்டே போனது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்பொழுது எங்கள் குடும்ப நண்பர் திருமதி சுப.மணிமேகலை, பாபாவை வேண்டிக்கொண்டு ஒன்பது வாரம் பாபா ஆலயம் போகச் சொன்னார். எனது மகளும் செல்ல ஆரம்பித்தாள்.



கவுன்சிலிங் ஆரம்பித்து அழைப்புத் தேதியும் வந்தது. சென்னை வந்தோம். முதல்நாளே அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டதாக இன்டர்நெட்டில் போட்டுவிட்டார்கள். அழுது கொண்டே திரும்பி வந்துவிட்டோம். எனது மகள் விடாமல் பாபா கோயிலுக்குச் சென்று வந்தாள்.



ஒன்பதாவது வாரம் பாபாவுக்கு கேசரி செய்துகொண்டு சென்றாள். ரஷ்யாவில் சீட்டு கிடைத்து படிக்கச்சென்றுவிட்டாள். வருகிற ஜூலை மாதம் வருகிறாள்.



எப்படி அவ்வளவு பணம் கிடைத்தது எப்படி அனுப்பினோம் என்று இன்று நினைத்தாலும் பிரமிப்பாக உள்ளது. எல்லாம் பாபாவின் அருளால் கிடைத்தது என்பதை மட்டும் என்னால் மறுக்கமுடியாது. அவள் இன்றும் ரஷ்யாவில் பாபாவை நினைக்காமல் எந்த காரியத்தையும் செய்யமாட்டாள்.



அமுதா குணசேகரன், திருச்சி.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...