Sunday, June 8, 2014

தலைவலிக்கு மருந்து!

sai sym

1915 ம் ஆண்டு தாராபாய் என்ற அம்மையார் கொடிய தலைவலியால் அவதிப்பட்டார். எந்த வைத்தியத்திற்கும் பலன் கிடைக்கவில்லை. இறந்துவிடுவது ஒன்றுதான் வலிக்கு நிவாரணம் என நினைத்த தாராபாய், இறப்பதாக இருந்தால் இங்கு ஏன் இறக்க வேண்டும்? பாபாவின் முன்னால் சீரடியில் இறப்பது நல்லது எனத் தீர்மானித்து சீரடிக்குப் புறப்பட்டார்.

கோபர்கான் அருகில் வந்ததும், கோதாவரி நதியருகே வண்டியை நிறுத்தச் சொல்லி, எப்படியோ சாகப் போகிறோம், கோதாவரி தீர்த்தத்தில் தலை மூழ்கினால் புண்ணியமும் கிடைக்கும், குளிர்ந்த நீர் பட்டு தலைவலி அதிகமாகி இறப்பும் சீக்கிரம் வரும் என அந்த அம்மாள் நினைத்து, தண்ணீரில் மூழ்கினார்.

தலைவலியோடு மூழ்கி எழுந்த தாராபாய்க்கு ஆச்சரியம்! இத்தனை காலமாக அவளை வாட்டியெடுத்த தலைவலி முற்றிலுமாக குணமடைந்துபோனது. அதன் பிறகு வரவேயில்லை. பாபாவின் அதிசய சிகிச்சையை நினைத்துப்புல்லரித்தார்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...