Thursday, June 5, 2014

கூட்டுப் பிரார்த்தனை மகிமை!

217fe-img_0682

என் பெயர் கிருஷ்ணமூர்த்தி. சென்னையில் வசிக்கிறேன். மூன்று வருடங்களாக அமெரிக்காவில் வேலை பார்க்கும் எங்கள் மகனுக்கு திருமணம் செய்ய, நல்ல வரன் தேடிக் கொண்டிருந்தோம்.

நாங்கள் வேண்டாத தெய்வமில்லை, எல்லா பரிகாரங்களும் செய்தோம். மனதில் கவலைதான் மிச்சம். நல்ல வரன் அமையவில்லை.

ஆகஸ்டு 2013 ல் அமெரிக்காவிலிருந்து எங்கள் நண்பர் ஒருவர், எங்கள் இல்லம் வந்து பெருங்களத்தூர் சீரடி சாயி பாபா பிரார்த்தனை கோயில் பற்றிச் சொன்னார்கள்.

நாங்கள் உடனே அதே மாதத்தில் சென்று பாபாவை வழிபாடு செய்து, எங்கள் வேண்டுதலை ஒரு கடிதத்தில் எழுதி பாபா பாதத்தில் பிரார்த்தனை செய்து வைத்துவிட்டு வந்தோம்.

அங்கு, சாயி தரிசனம் புத்தகம் வாங்கிவந்து படிக்க ஆரம்பித்தோம். அதில், சாயி வரதராஜன் அவர்கள், சாயி பாபாவிடம் சரணடைந்து திடமான நம்பிக்கையை வைத்து, நம் சுமையை பாபாவிடம் விட்டுவிட்டால் வேண்டுதலை நிறைவேற்றுவார் என எழுதியிருந்தார்.

இதைப்படித்தவுடன்தான் எங்களுக்கு பாபா மீது திடமான நம்பிக்கை வந்தது, பக்தி வந்தது. அவர் பாதங்களே கதி என்று முடிவு எடுத்து, எங்கள் சுமையை சாயி பாபாவிடம் வைத்தோம். எப்படியும் பாபா நமது பிரார்த்தனையை நிறைவேற்றிவிடுவார் என மனதார பிரார்த்தனை செய்துவந்தோம்.

நாங்கள், பாபா பாதத்தில் கடிதம் வைத்த ஒரே வாரத்தில், நாங்கள் நினைத்த மாதிரி பாபா நல்ல வரன் காண்பித்தார். மீண்டும் புதுப்பெருங்களத்தூர் சாயி பாபா கோயில் வந்தோம். சாயி வரதராஜன் அவர்களின் கூட்டுப் பிரார்த்தனையில் இந்த என் மகனுக்கு அமைய பிரார்த்தனை செய்தோம்.

புதுப்பெருங்களத்தூர் பாபா அருளால் திருமண நிச்சயதார்த்தம் நடந்து, மார்ச் மாதம் திருமணம் சிறப்பாக நடந்தேறியது. எல்லாமே கூட்டுப்பிரார்த்தனையின் மகிமை.

திடமான நம்பிக்கையும், பொறுமையுமே நமக்கு இருக்கவேண்டும் என சாயி பாபா நமக்குப் புரிய வைக்கிறார்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...