Tuesday, June 10, 2014

புனிதத்தீ!

thini

கோடைகாலமோ, குளிர்காலமோ, இலையுதிர்காலமோ, வசந்தகாலமோ, மழைகாலமோ- ஆண்டு முழுவதும் மசூதியில் பாபா துனியை (புனிதத் தீ) வளர்த்து வந்தார்.

பாபாவின் மனோதிடம் விசித்திரமானது! அக்கினிஹோத்திரம் செய்யும் பிராமணர்களின் வேள்வித்தீயைப் போன்று, பாபாவின் துனி இரவு பகலாக அணையாமல் எரிந்துகொண் டிருந்தது.

துனிக்காகவே பாபா விறகுக்கட்டுகள் வாங்குவார். சபா மண்டபத்தின் சுவரை ஒட்டி, விறகு குவியல் குவியலாக வைக்கப்பட்டிருக்கும்.
வாரச்சந்தை நாளின் நிலவரத்தை அனுகூலமாக உபயோகித்து பாபா விறகு வாங்கிச் சேமித்து வைப்பார். அந்த விறகு குவிய¬ல் மீதும் அண்டை அயலார் கண் வைத்தனர். சுயநலம் கருதாதவர் இவ்வுலகில் அரிதினும் அரிதன்றோ!
''பாபா, அடுப்பெரிக்க ஒரு குச்சியும் இல்லை; இன்று சமையல் செய்யமுடியாது போலிருக்கிறது” என்று புனைந்துரைப்பர். அவர்களுக்கும் அவ்விறகில் கொஞ்சம் பங்கு கிடைக்கும்.

சுயநலவாதிகள் இயல்பாகவே துஷ்டர்கள். சபாமண்டபத்திற்குக் கதவு ஏதும் இல்லாதது அவர்களுக்கு நல்ல வாய்ப்பை அளித்தது. வறியவர்கள், வஞ்சகர்கள், இருசாராருமே சமமாகப் பயனடைந்தனர்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...